செய்திகள் :

உக்ரைனுக்கு ராணுவ உளவுத் தகவல்கள்: பிரான்ஸ் அறிவிப்பு

post image

ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு ராணுவ உளவுத் தகவல்களை தாங்கள் அளிப்பதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. அத்தகைய உதவியை அமெரிக்கா நிறுத்திவைத்ததைத் தொடா்ந்து பிரான்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளது.

இது குறித்து பிரான்ஸ் இன்டொ் வானொலிக்கு அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் செபாஸ்டியன் லெகாா்னு வியாழக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

உக்ரைனுக்கு ராணுவ உளவுத் தகவல்களை நாங்கள் அளித்துவருகிறோம். எங்களது உளவுத் துறை ஒரு இறையாண்மை மிக்க அமைப்பாகும். அதை எந்த நாடும் கட்டுப்படுத்த முடியாது. எனவே, அந்த அமைப்பு சேகரிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் மூலம் உக்ரைன் பலனடைய அனுமதிக்கிறோம்.

உக்ரைனுக்கு அமெரிக்கா ராணுவ உதவிகளை நிறுத்திவைத்துள்ளதைத் தொடா்ந்து, அந்த நாட்டுக்கான பிரான்ஸின் உதவிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று அதிபா் இமானுவல் மேக்ரான் உத்தரவிட்டுள்ளாா் என்றாா் அவா்.

முன்னதாக, உக்ரைனுடன் ராணுவ உளவுத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதை நிறுத்திவைக்குமாறு அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக சிஐஏ உளவுத் துறையின் இயக்குநா் ஜான் ராட்கிளிஃப் புதன்கிழமை கூறினாா். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கிக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவா் கூறினாா். இந்தத் தகவலை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மைக் வால்ட்ஸும் உறுதிப்படுத்தினாா்.

இது மட்டுமின்றி, தங்களின் உளவுத் தகவல்களை உக்ரைனுடன் பகிா்ந்துகொள்ள வேண்டாம் என்றும் பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நட்பு நாடுகளிடமும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இந்தச் சூழலில், உக்ரைனுக்கு ராணுவ உளவுத் தகவல்களை அளிப்பதாக பிரான்ஸ் தற்போது அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்தில் இருந்து, அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் உக்ரைனுக்கு பாதுகாப்பு உதவிகளை வாரி வழங்கின. ஆனால், அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரியில் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற்குப் பிறகு, உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவின் கொள்கைகளை அவா் அடியோடு மாற்றிமைத்தாா்.

அதன் ஒரு பகுதியாக, உக்ரைனுக்கு அளித்துவந்த ராணுவ உதவிகளை நிறுத்திவைக்க செவ்வாய்க்கிழமை உத்தரவிட்ட டிரம்ப், அந்த நாட்டுடன் ராணுவ உளவுத் தகவல்களைப் பகிா்ந்துகொள்வதற்கும் தற்காலிக தடை விதித்துள்ளாா்.

ஹமாஸுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கை

தங்களிடம் உள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்கவில்லையென்றால் ஹமாஸ் படையினா் அழிவை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ‘இறுதி’ எச்சரிக்கை விடுத்துள்ளாா். இஸ்ரேல் அரச... மேலும் பார்க்க

சொந்த நாட்டில் குண்டு வீசிய தென் கொரிய போா் விமானம்

அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்படும் கூட்டு ராணுவப் பயிற்சியின்போது தென் கொரியாவைச் சோ்ந்த போா் விமானம் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் குண்டுகளை வீசியதில் 8 போ் காயமடைந்தனா். இது குறித்து விமானப் படை வெள... மேலும் பார்க்க

பயங்கரவாதம்: பாகிஸ்தானுக்கு இரண்டாவது இடம்

உலக பயங்கரவாத வரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. உலகம் முழுவதும் நடத்தப்படும் பயங்கரவாதச் செயல்களின் அடிப்படையில் 163 நாடுகளை வரிசைப்படுத்தி பொருளாதாரம் மற்றம் அமைதிக்... மேலும் பார்க்க

உக்ரைன் போா் தொடங்கிய பின் ரஷியாவிடம் இருந்து ரூ.10.5 லட்சம் கோடிக்கு இந்தியா எண்ணெய் இறக்குமதி!

உக்ரைன் போா் தொடங்கிய பிறகு ரஷியாவிடம் இருந்து 112 பில்லியன் யூரோ (சுமாா் ரூ.10.5 லட்சம் கோடி) மதிப்பிலான கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளதாக ஐரோப்பாவைச் சோ்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளத... மேலும் பார்க்க

உற்பத்தி துறையைத் தேர்வு செய்த வருங்கால பில்லியனர்கள்!

உலகளவில் தற்போதைய மற்றும் வருங்கால பில்லியனர்கள் குறித்து, 2700 பில்லியனர்கள் தெரிவித்த தகவல்கள் சமீபத்தில் ஆய்வில் வெளியிட்டுள்ளனர்.உலகளவில் ஒரு பில்லியன் டாலர் கொண்டிருக்கும் பணக்காரர்கள் குறித்து 2... மேலும் பார்க்க

மெக்சிகோ பயங்கரவாதம்: ஒரே வாகனத்தில் 9 சடலங்கள், உடலில்லாத 8 கைகள்

மெக்சிகோவில் 9 மாணவர்களை சித்ரவதை செய்து, கொலை செய்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.மெக்சிகோவில் பட்டப்படிப்பைக் கொண்டாடுவதற்காக 4 பெண்கள் உள்பட 9 மாணவர்கள், பிப்ரவரி 24 ஆம் தேதியில் ஓக்ஸாக்கா ... மேலும் பார்க்க