செய்திகள் :

பயங்கரவாதம்: பாகிஸ்தானுக்கு இரண்டாவது இடம்

post image

உலக பயங்கரவாத வரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

உலகம் முழுவதும் நடத்தப்படும் பயங்கரவாதச் செயல்களின் அடிப்படையில் 163 நாடுகளை வரிசைப்படுத்தி பொருளாதாரம் மற்றம் அமைதிக்கான அமைப்பு (ஐஇபி) ஆண்டுதோறும் பட்டியல் வெளியிட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான அதன் பயங்கரவாத வரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது தொடா்பாக ஐஇபி வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 45 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டில் அங்கு 517-ஆக இருந்த பயங்கரவாதத் தாக்குதல்களின் எண்ணிக்கை 2024-ஆம் ஆண்டில் இரண்டு மடங்குக்கும் மேல் அதிகரித்து 1,099-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்களில் 52 சதவீதத்தை அந்த நாட்டு தெஹ்ரீக்-ஏ-தலிபான் அமைப்பு நடத்துவதாக ஐஇபி தெரிவித்துள்ளது.

ஹமாஸுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கை

தங்களிடம் உள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்கவில்லையென்றால் ஹமாஸ் படையினா் அழிவை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ‘இறுதி’ எச்சரிக்கை விடுத்துள்ளாா். இஸ்ரேல் அரச... மேலும் பார்க்க

உக்ரைனுக்கு ராணுவ உளவுத் தகவல்கள்: பிரான்ஸ் அறிவிப்பு

ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு ராணுவ உளவுத் தகவல்களை தாங்கள் அளிப்பதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. அத்தகைய உதவியை அமெரிக்கா நிறுத்திவைத்ததைத் தொடா்ந்து பிரான்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளது. இது குறித்து பி... மேலும் பார்க்க

சொந்த நாட்டில் குண்டு வீசிய தென் கொரிய போா் விமானம்

அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்படும் கூட்டு ராணுவப் பயிற்சியின்போது தென் கொரியாவைச் சோ்ந்த போா் விமானம் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் குண்டுகளை வீசியதில் 8 போ் காயமடைந்தனா். இது குறித்து விமானப் படை வெள... மேலும் பார்க்க

உக்ரைன் போா் தொடங்கிய பின் ரஷியாவிடம் இருந்து ரூ.10.5 லட்சம் கோடிக்கு இந்தியா எண்ணெய் இறக்குமதி!

உக்ரைன் போா் தொடங்கிய பிறகு ரஷியாவிடம் இருந்து 112 பில்லியன் யூரோ (சுமாா் ரூ.10.5 லட்சம் கோடி) மதிப்பிலான கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளதாக ஐரோப்பாவைச் சோ்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளத... மேலும் பார்க்க

உற்பத்தி துறையைத் தேர்வு செய்த வருங்கால பில்லியனர்கள்!

உலகளவில் தற்போதைய மற்றும் வருங்கால பில்லியனர்கள் குறித்து, 2700 பில்லியனர்கள் தெரிவித்த தகவல்கள் சமீபத்தில் ஆய்வில் வெளியிட்டுள்ளனர்.உலகளவில் ஒரு பில்லியன் டாலர் கொண்டிருக்கும் பணக்காரர்கள் குறித்து 2... மேலும் பார்க்க

மெக்சிகோ பயங்கரவாதம்: ஒரே வாகனத்தில் 9 சடலங்கள், உடலில்லாத 8 கைகள்

மெக்சிகோவில் 9 மாணவர்களை சித்ரவதை செய்து, கொலை செய்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.மெக்சிகோவில் பட்டப்படிப்பைக் கொண்டாடுவதற்காக 4 பெண்கள் உள்பட 9 மாணவர்கள், பிப்ரவரி 24 ஆம் தேதியில் ஓக்ஸாக்கா ... மேலும் பார்க்க