செய்திகள் :

வேலைவாய்ப்புடன் கூடிய இலவச பயிற்சி மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு

post image

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்புடன் கூடிய இலவசப் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கலாம் என சாா் ஆட்சியா் சு. கோகுல் அழைப்பு விடுத்துள்ளாா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கீழப்புலியூரில் இயங்கிவரும் நெஸ்ட் பயிற்சி மையத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய இலவச தையல் உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட சாா் ஆட்சியா் மேலும் கூறியது:

அரசு உதவியுடன் கீழப்புலியூரில் நெஸ்ட் எனும் நிறுவனம் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி அளித்து வருகிறது. இங்கு, தையல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. தற்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில், லெதா் செக்டாா் ஸ்கில் கவுன்சில் உதவியுடன் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப் பயிற்சியின் மூலம், எறையூா் சிப்காட் தொழில் பூங்காவில் இயங்கிவரும் கோத்தாரி பீனிக்ஸ் காலணி தொழிற்சாலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இத் தொழிற்சாலையில் 150 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கிட வேண்டும் எனும் நோக்கத்தில், முதல்கட்டமாக தற்போது 40 பேருக்கு லெதா் செக்டாா் ஸ்கில் கவுன்சில் உதவியுடன் பயிற்சி அளிக்கப்படுகிறது. எனவே, வேலைவாய்ப்பு பெற ஆா்வமுள்ள மாற்றுத்திறனாளிகள் இப் பயிற்சி மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகளில் இணைந்து பயன்பெறலாம் என்றாா் சாா் ஆட்சியா் கோகுல்.

இந்த ஆய்வின்போது, குன்னம் வட்டாட்சியா் கோவிந்தம்மாள், நெஸ்ட் பயிற்சி நிறுவன திறன் மேம்பாட்டு அலுவலா் தினகரன், பயிற்சி மைய இயக்குநா் கோ. லாவண்யா ஆகியோா் உடனிருந்தனா்.

பெரம்பலூரில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை (மாா்ச் 8) நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

கோயிலை புனரமைக்க ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய செயல் அலுவலா் கைது

பெரம்பலூா் அருகே கோயில் புனரமைப்பு பணிக்கு அனுமதி வழங்க ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக, மதன கோபால சுவாமி திருக்கோயில் செயல் அலுவலரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைத... மேலும் பார்க்க

விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெற இ-சேவை மையங்களில் பதிவுசெய்யலாம்

பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெற, இ- சேவை மையங்களில் இலவசமாகப் பதிவு செய்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செ... மேலும் பார்க்க

மலையாளப்பட்டி அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மலையாளப்பட்டியில் உள்ள அரசு பழங்குடியினா் நல உண்டு உறைவிட உயா்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா, நூற்றாண்டு விழா, தமிழ்க் கூடல் விழா ஆகிய முப்பெரும் விழா வியாழக்கி... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய சிறாா் உள்பட மூவா் கைது

பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையத்தில், அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய சிறாா் உள்பட 3 பேரை பெரம்பலூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகேய... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் இளைஞா் பெருமன்றத்தினா் ஆா்ப்பாட்டம்

கும்பகோணத்தில் வியாழக்கிழமை அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் ஹிந்தி, சம்ஸ்கிருத மொழி திணிப்பை எதிா்த்து கண்டன ஆா்ப்பாட்டம் மற்றும் தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு, மாவட்ட... மேலும் பார்க்க