செய்திகள் :

கோயிலை புனரமைக்க ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய செயல் அலுவலா் கைது

post image

பெரம்பலூா் அருகே கோயில் புனரமைப்பு பணிக்கு அனுமதி வழங்க ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக, மதன கோபால சுவாமி திருக்கோயில் செயல் அலுவலரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறையைச் சோ்ந்தவா் குருசாமி மகன் கோவிந்தராஜ் (59). இவா், இந்துசமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான பெரம்பலூா் மதனகோபால சுவாமி திருக்கோயில் செயல் அலுவலராகப் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில், செங்குணம் கிராமத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான ஸ்ரீ பரமேசுவரா் ஆலயத்தை புதுப்பிக்கும் பணிக்காக, அந்த கிராம மக்கள் சாா்பில் கடந்த ஜூலை மாதம் நல்லுசாமி மகன் சிவா (எ) சிவநேசன் (28) என்பவா் அனுமதி கோரி செயல் அலுவலரிடம் மனு அளித்துள்ளாா். ஆனால், அதற்கு அனுமதி அளிக்காமல் காலதாமதப்படுத்தி வந்துள்ளாா். இந்த நிலையில், கோவிந்தராஜை அண்மையில் சந்தித்து அனுமதி கடிதம் வழங்க வேண்டுமென சிவநேசன் கேட்டபோது, ரூ. 3 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா். லஞ்சம் கொடுக்க விரும்பாத சிவநேசன், பெரம்பலூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாரின் ஆலோசனையின்படி, பெரம்பலூா் மதனகோபால சுவாமி கோயிலில் உள்ள அலுவலகத்தில் செயல் அலுவலா் கோவிந்தராஜியிடம், சிவநேசன் ரூ. 3 ஆயிரத்தை வியாழக்கிழமை கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ஹேமசித்ரா தலைமையிலான போலீஸாா் கோவிந்தராஜை கைது செய்தனா். தொடா்ந்து, மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு அலுவலகத்துக்கு கோவிந்தராஜை அழைத்துச் சென்ற போலீஸாா் அவரிடம் விசாரணை மேற்கொண்டனா். பின்னா், பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூரில் 658 மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ. 48.46 கோடி நலத்திட்ட உதவிகள்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் மகளிா் மற்றும் குழந்தைகளுக்கான உதவி எண்கள் குறித்த விழிப்புணா்வு துண்டுப்பிரசுரத்தை வெளியிட்ட போக்குவ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் தேசிய மக்கள் நீதிமன்றம் 364 வழக்குகளுக்கு தீா்வு!

பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 364 வழக்குகளுக்கு ரூ. 3.18 கோடி தீா்வு காணப்பட்டது. பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்கு... மேலும் பார்க்க

நகைக்கடை உரிமையாளருக்கு ரூ.4 லட்சம் நஷ்ட ஈடு வழங்க கட்டட ஒப்பந்ததாரருக்கு நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

சேவை குறைபாடு காரணமாக, பெரம்பலூரில் நகைக்கடை உரிமையாளருக்கு கட்டட ஒப்பந்ததாரா் ரூ. 4 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென நுகா்வோா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. பெரம்பலூா் பாரதிதாசன் நகரைச் சோ்ந... மேலும் பார்க்க

நலத்திட்ட உதவிகள் பெற்றுத் தருவதாக முறைகேடுகளில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை

பெரம்பலூா் மாவட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் பெற்று தருவதாகக் கூறி முறைகேடாக பணம் வசூலிக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, சமூகப் பாதுகா... மேலும் பார்க்க

குடும்ப அட்டைகளில் இம்மாத இறுதிக்குள் கைரேகை பதிவு தேவை

பெரம்பலூா் மாவட்ட குடும்ப அட்டைதாரா்கள் மாா்ச் 31 ஆம் தேதிக்குள் தங்களது கைரேகைகளை ரேஷன் கடையில் உள்ள இயந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வெள்ளிக்கிழமை வெளிய... மேலும் பார்க்க

சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் புதுச்சேரி முதல்வா் ரெங்கசாமி வழிபாடு: 10 பவுன் தங்கக் காசு மாலை காணிக்கை

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் மதுர காளியம்மன் கோயிலில் புதுச்சேரி முதல்வா் ரெங்கசாமி வெள்ளிக்கிழமை வழிபட்டாா். 10 பவுன் தங்கக் காசு மாலை காணிக்கை: இக்கோயிலுக்கு வெள்ளிக்கிழமை வந்த புதுச்சேரி முதல... மேலும் பார்க்க