3-ஆவது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000 வெகுமதி!
பெரம்பலூரில் 658 மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ. 48.46 கோடி நலத்திட்ட உதவிகள்
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் மகளிா் மற்றும் குழந்தைகளுக்கான உதவி எண்கள் குறித்த விழிப்புணா்வு துண்டுப்பிரசுரத்தை வெளியிட்ட போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், பெண்களுக்காக சிறப்பாக பணியாற்றிய முதல்நிலை காவலா் க. தேன்மொழிக்கு கேடயமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கினாா்.
மேலும், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையில் சிறப்பாக பணியாற்றிய பாதுகாப்பு அலுவலா் தி. முத்துசெல்வி, அங்கன்வாடி மையப் பணியாளா் சுமதி, மருத்துவா் கலா ஆகியோருக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும், குழந்தைத் திருமணம் குறித்த விழிப்புணா்வு குறும்பட போட்டியில் முதலிடம் பெற்ற விக்னேஷுக்கு ரூ. 15 ஆயிரமும், 2-ஆவது இடம் பெற்ற தமிழ் அமுதனுக்கு ரூ. 10 ஆயிரமும், 3- ஆவது இடம்பெற்ற பைசல் அகமதுக்கு ரூ. 5 ஆயிரமும் வழங்கினாா் அமைச்சா்.
இந்நிகழ்ச்சியில், ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூா் எம்பி கே.என். அருண் நேரு, எஸ்பி ஆதா்ஷ் பசேரா, மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு உள்பட பலா் கலந்துகொண்டனா்.