செய்திகள் :

CT Unfair Advantage: ``ஒருவேளை இந்தியா தோற்றிருந்தால்..." - விமர்சனங்களுக்கு புஜாரா பதிலடி

post image

பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. இந்தியாவும், நியூசிலாந்தும் 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இன்று மோதுகிறது. துபாயில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானுக்கு செல்ல இந்திய அணி மறுத்துவிட்டதால், இந்தியா ஆடும் போட்டிகள் அனைத்தையும் துபாயில் நடத்தப்படுகிறது.

இந்தியா - Champions trophy
இந்தியா - Champions trophy

இதனாலேயே, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மூன்று மைதாங்கள் இருந்தும் துபாய் மைதானத்தில் மட்டும் இந்திய அணியை ஆடவைப்பது நியாயமற்ற செயல், இது இந்தியாவுக்கு சாதமான செயல் என முன்னாள், இந்நாள் வீரர்கள் ஐ.சி.சி-யை விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தியாவின் அனைத்து போட்டிகளையும் துபாய் மைதானத்தில் நடத்துவது இந்தியாவுக்கு சாதகமானது என்று தான் நினைக்கவில்லை என இந்திய வீரர் புஜாரா தெரிவித்திருக்கிறார்.

புஜாரா ஓப்பன் டாக்

பிரபல தனியார் ஊடகத்திடம் இதுகுறித்து பேசிய புஜாரா, ``சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்பே போட்டி அட்டவணை வெளியானது. மேலும், இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லாததற்குக் காரணம் பாதுகாப்பு வசதிதான். அதனால், ஐ.சி.சி-யும், பி.சி.சிஐ-யும் இணைந்து நடுநிலையான மைதானத்தை தேடின. அதன்படி, இந்தியாவும் பாகிஸ்தானும் நடுநிலையான மைதானத்தில் விளையாடின. அதோடு, ஐக்கிய அரபு எமிரேட்ஸும் பாகிஸ்தானுக்கு நெருக்கமாக இருக்கிறது. எனவே, இதனை நியாயமற்றது என்றும் இந்தியாவுக்கு சாதகமானது என்றும் நான் நினைக்கவில்லை.

புஜாரா
புஜாரா

ஒருவேளை, இந்தியா தோற்றிருந்தால் துபாயில் விளையாடுவது பற்றி யாரும் பேசியிருக்க மாட்டார்கள். இந்தியாவிடம் இருக்கும் ஆல்ரவுண்டர்களின் எண்ணிக்கைதான் இந்தியாவுக்கு சாதகம். எங்களிடம் ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப், வருண் உள்ளனர். இந்த நான்கு பேரும் தரமான சுழற்பந்து வீச்சாளர்கள். இதுவே மற்ற அணிகளைப் பார்த்தால், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் பாகிஸ்தானிலும் தடுமாறுகிறார்கள். ஹர்திக் பாண்டியா உட்பட எங்களிடம் சிறந்த ஆல்-ரவுண்டர்கள் உள்ளனர். மேலும், பேட்டிங் யூனிட் நன்றாக இருக்கிறது . இந்திய அணியின் இந்த சமநிலையே வெற்றிக்கு காரணம்." என்று கூறினார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Varun Chakaravarthy : 'பந்து அவ்வளவா ஸ்பின் ஆகல!' - டார்கெட்டை எட்ட வருண் சொல்லும் வழி

சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டி நடந்துகொண்டிருக்கிறது. நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்து 251 ரன்களை எடுத்திருக்கிறது. இந்தியாவுக்கு 252 ரன்கள் டார்கெட். இதில் தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தி 1... மேலும் பார்க்க

IND vs NZ: ஸ்பின்னர்கள் இருக்க பயமேன்; சொல்லியடித்த ரோஹித்; நியூசிலாந்து தடுமாறியது ஏன்?

சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடி முடித்திருக்கிறது. இந்திய ஸ்பின்னர்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் நியூசிலாந்து அணி திணறிப்போய் விட்டது.முதல் இன்னிங்ஸ... மேலும் பார்க்க

Rohit Sharma : `அது உங்களுக்குப் புரியாது சார்' - இயற்கை நியதிக்கே சவால்விட்ட ரோஹித் சர்மா

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான இறுதிப்போட்டி துபாயில் நடந்து வருகிறது. இந்தப் போட்டிக்கான டாஸை ரோஹித் சர்மா தோற்றிருந்தார். தொடர்ச்சியாக 15 வது முறையாக டாஸில் தோ... மேலும் பார்க்க

IND vs NZ: ``இந்தியா 0 கி.மீ, நியூசிலாந்து 7,150 கி.மீ" - வெற்றி குறித்து விமர்சிக்கும் ஜுனைத் கான்

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் துபாய் மைதானத்தில் இந்தியாவும், நியூசிலாந்தும் விளையாடி வரும் இதேநேரத்தில், இந்தியா விளையாடிய போட்டிகள் மட்டும் ஒரே மைதானத்தில் நடத்தப்படுவது குறித்து பலரும் விமர... மேலும் பார்க்க

IND vs NZ : ``நியூசிலாந்துக்கு எதிராக ஆடுவது சவால்தான், ஆனாலும்..." - டாஸில் ரோஹித் உறுதி

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதவிருக்கின்றன. துபாயில் நடைபெறும் இந்தப் போட்டியின் டாஸ் முடிந்திருக்கிறது. நியூசிலாந்து அணிதான் டாஸை வென்றது. சாண்ட்னர் முதலி... மேலும் பார்க்க

Rohit Sharma: ``இது ஒற்றைப்படை ஆண்டு..." - உற்சாகத்தில் சூர்யகுமார் யாதவ்

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை இந்தியா இன்று எதிர்கொள்கிறது. கடைசியாக நடைபெற்ற இரண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் (2013 வெற்றி, 2017 தோல்வி) பைனலுக்கு முன்னேறிய இந்திய அணி இன்று கோ... மேலும் பார்க்க