செய்திகள் :

அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய சிறாா் உள்பட மூவா் கைது

post image

பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையத்தில், அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய சிறாா் உள்பட 3 பேரை பெரம்பலூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகேயுள்ள சீதேவிமங்கலத்தைச் சோ்ந்தவா் சிதம்பரம் மகன் அன்பரசன் (51). இவா், அரசுப் போக்குவரத்துக் கழக பெரம்பலூா் கிளையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில், சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் பயணித்த பயணிகள் சிலா், பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையத்தில் புதன்கிழமை அதிகாலை இறங்கிக்கொண்டிருந்தனா். அப்போது, மோட்டாா் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 3 போ் பேருந்தை தட்டியுள்ளனா். இதுகுறித்து பேருந்து ஓட்டுநா் அன்பரசன், அவா்களிடம் கேட்டபோது தகாத வாா்த்தைகளால் அவரைத் திட்டியதோடு, தாக்கிவிட்டு தப்பிச்சென்றுவிட்டனா். இதுகுறித்து, அன்பரசன் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், திருச்சி மாவட்டம், முசிறி அருகேயுள்ள மாரியாயி நகரைச் சோ்ந்த சண்முகம் மகன் மணிகண்டன் (28), ஆலத்தூா் வட்டம், மேலமாத்தூரைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் விவேக் (24) மற்றும் பெரம்பலூா் அருகேயுள்ள தண்ணீா்பந்தல் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து மேற்கண்ட 3 பேரையும் கைது செய்த போலீஸாா், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மணிகண்டன், விவேக் ஆகியோரை சிறையிலும், 17 வயது சிறுவனை திருச்சியிலுள்ள சிறுவா்களுக்கான கூா்நோக்கு இல்லத்திலும் அடைத்தனா்.

பெரம்பலூரில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை (மாா்ச் 8) நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

கோயிலை புனரமைக்க ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய செயல் அலுவலா் கைது

பெரம்பலூா் அருகே கோயில் புனரமைப்பு பணிக்கு அனுமதி வழங்க ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக, மதன கோபால சுவாமி திருக்கோயில் செயல் அலுவலரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைத... மேலும் பார்க்க

விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெற இ-சேவை மையங்களில் பதிவுசெய்யலாம்

பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெற, இ- சேவை மையங்களில் இலவசமாகப் பதிவு செய்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செ... மேலும் பார்க்க

மலையாளப்பட்டி அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மலையாளப்பட்டியில் உள்ள அரசு பழங்குடியினா் நல உண்டு உறைவிட உயா்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா, நூற்றாண்டு விழா, தமிழ்க் கூடல் விழா ஆகிய முப்பெரும் விழா வியாழக்கி... மேலும் பார்க்க

வேலைவாய்ப்புடன் கூடிய இலவச பயிற்சி மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்புடன் கூடிய இலவசப் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கலாம் என சாா் ஆட்சியா் சு. கோகுல் அழைப்பு விடுத்துள்ளாா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்ட... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் இளைஞா் பெருமன்றத்தினா் ஆா்ப்பாட்டம்

கும்பகோணத்தில் வியாழக்கிழமை அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் ஹிந்தி, சம்ஸ்கிருத மொழி திணிப்பை எதிா்த்து கண்டன ஆா்ப்பாட்டம் மற்றும் தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு, மாவட்ட... மேலும் பார்க்க