செய்திகள் :

மீண்டும் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ்! இங்கிலாந்து அணியின் நிர்வாக இயக்குநர் பேட்டி!

post image

ஜாஸ் பட்லருக்கு பதிலாக மீண்டும் பென் ஸ்டோக்ஸை கேப்டனாக நியமிக்க இங்கிலாந்து அணியின் நிர்வாக இயக்குநர் ராப் கீ விருப்பம் தெரிவித்தார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தேர்வாகாமல் மிக மோசமாக விளையாடி வெளியேறியது. இதனால் அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் தனது கேப்டன் பதவியை ராஜிநாமா செய்தார்.

இங்கிலாந்தின் வெள்ளைப் பந்து (டி20, ஒருநாள்) கிரிக்கெட்டின் அடுத்த கேப்டன் யார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

2023 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை. 2022இல் ஓய்வை அறிவித்த அவர் உலகக் கோப்பைக்காக வந்து விளையாடினார். தற்போது மீண்டும் அவரை அணி தேடுகிறது.

புத்திசாலிதனமான கேப்டன்

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் நிர்வாக இயக்குநர் ராப் கீ கூறியதாவது:

இருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பார்க்க வேண்டும். அதனால் என்னென்ன பாதிப்பு வருகிறதென பார்க்க வேண்டும். நான் பார்த்ததிலேயே பென் ஸ்டோக்ஸ்தான் சிறந்த கேப்டன். அவரை எதிர்பார்ப்பது முட்டாள்தனமாக இருக்கும்.

அவர் மிகவும் புத்திசாலிதனமான கேப்டன். டெஸ்ட்டில் அவரை பார்த்துள்ளோம். அவர் ஆண்களின் தலைவன். வீரர்களிடமிருந்து சிறந்தவற்றை எடுக்கும் ஒரு நபர். அழுத்தமான சூழ்நிலைகளில் ‘இதுதான் சரியான பாதை. செல்லுங்கள்’ என அணியை வழிநடத்துபவர் ஸ்டோக்ஸ்தான்.

ஸ்டோக்ஸ் சிறந்த அணித்தலைவர்

அணித்தலைவராக இருக்க ஒரு தகுதி வேண்டும். அது ஸ்டோக்ஸ்டிடம் சிறப்பாக இருக்கிறது. அவர் சிறந்த வீரர் மட்டுமில்லாமல் சிறந்த தலைவரும் ஆவார்.

பென் ஸ்டோக்ஸுக்கு வேலைப் பளு இல்லாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். மற்ற விஷயங்களிலும் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.

கேப்டனாக யாரைத் தேர்ந்தெடுத்தால் என்னவாகும்? தவறாக சென்றாலும் சரியாக சென்றாலும் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்பதை நான் முடிவு செய்தாக வேண்டும் என்றார்.

இன்று இறுதி ஆட்டம்; இந்தியா - நியூஸிலாந்து பலப்பரீட்சை

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 9) பலப்பரீட்சை நடத்தவுள்ளன.இரு முறை சாம்பியனான (2013, 2022) இந்திய அணி 3-ஆவது கோப்பைக்கு... மேலும் பார்க்க

காயம் காரணமாக விலகிய வேகப் பந்துவீச்சாளர்; மும்பை இந்தியன்ஸில் இணைந்த ஆல்ரவுண்டர்!

காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய லிஸாத் வில்லியம்ஸுக்குப் பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆல்ரவுண்டரான கார்பின் போஸ்ச் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி ... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபியுடன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஓய்வா? ஷுப்மன் கில் பதில்!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருடன் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஓய்வுபெற உள்ளார்களா என்பது குறித்து அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.கடந்த மாதம் தொடங்கிய ஐசிசி... மேலும் பார்க்க

வங்கதேசம் - ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியீடு!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அட்டவணையை வங்கதேச கிரிக்கெட் வாரியம் இன்று (மார்ச் 8) வெளியிட்டுள்ளது.ஜிம்பாப்வே அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொ... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்லும்; ஐபிஎல் தலைவர் நம்பிக்கை!

சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வெல்லும் என ஐபிஎல் தலைவர் அருண் துமல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளையுடன் நிறைவடைகிறது. துபையில் நாளை (மார்ச் 9) நடைபெறும் இற... மேலும் பார்க்க

இறுதிப்போட்டிக்கு முன்பாக இந்திய அணிக்கு ரவி சாஸ்திரி கொடுத்த எச்சரிக்கை!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொ... மேலும் பார்க்க