செய்திகள் :

சாம்பியன்ஸ் டிராபியுடன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஓய்வா? ஷுப்மன் கில் பதில்!

post image

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருடன் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஓய்வுபெற உள்ளார்களா என்பது குறித்து அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.

கடந்த மாதம் தொடங்கிய ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. துபையில் நாளை (மார்ச் 9) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன.

ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருமே சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இருப்பினும், சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வென்றால், இவர்கள் இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துவிடுவார்கள் எனவும், குறைந்தது இருவரில் ஒருவராவது ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இதையும் படிக்க: இறுதிப்போட்டிக்கு முன்பாக இந்திய அணிக்கு ரவி சாஸ்திரி கொடுத்த எச்சரிக்கை!

ஷுப்மன் கில் கூறியதென்ன?

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ரோஹித் மற்றும் கோலி ஓய்வை அறிவித்து விடுவார்கள் எனக் கூறப்படும் நிலையில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஓய்வு குறித்து இந்திய அணியில் எந்தவொரு ஆலோசனையும் நடைபெறவில்லை என அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

ஷுப்மன் கில்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரின் ஓய்வு குறித்து இந்திய அணியில் தற்போது எந்தவொரு ஆலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்திய அணியின் பேட்டிங் வரிசை வலுவாக உள்ளது. உலகின் தலைசிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ரோஹித் சர்மாவும் ஒருவர். அவர் அணியில் தொடக்க ஆட்டக்காரராக பலம் சேர்க்கிறார். விராட் கோலியின் ஆட்டம் குறித்து சொல்லத் தேவையில்லை. அவர் அந்த அளவுக்கு சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். அணியில் பின்வரிசை ஆட்டக்காரர்கள் வரை பேட்டிங் வரிசை நன்றாக இருப்பதால், முன்வரிசை ஆட்டக்காரர்கள் அழுத்தமின்றி சுதந்திரமாக விளையாடலாம்.

இதையும் படிக்க: இந்தியாவுக்கு எதிரான தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டதென்ன? நியூசி. வீரர் பதில்!

இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளதை நினைத்து ஆவலாக உள்ளோம். கடந்த முறை 50 ஓவர் உலகக் கோப்பையை எங்களால் வெல்ல முடியவில்லை. ஆனால், இந்த முறை 50 ஓவர் வடிவில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியை வெல்வதில் உறுதியாக உள்ளோம். பெரிய போட்டிகளில் அழுத்தம் என்பது இருக்கும். ஆனால், எந்த அணி அழுத்தத்தை சரியாக கையாண்டு விளையாடுகிறதோ அந்த அணி கோப்பையை வெல்லும். மற்ற போட்டிகளில் விளையாடியதைப் போன்று நாளை நடைபெறும் இறுதிப்போட்டியிலும் நாங்கள் விளையாட வேண்டும். துபையில் நான்கு போட்டிகளில் விளையாடி சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளோம். அதனால், எந்த ஒரு கூடுதல் அழுத்தமும் எங்களுக்கு இல்லை என்றார்.

நியூஸி. சுழலில் இந்தியா திணறல்!

துபை : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணி இந்திய பேட்ஸ்மென்களை ரன் எடுக்க விடாமல் கட்டுப்படுத்தியுள்ளது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: அரைசதம் கடந்து ரோஹித் சர்மா அதிரடி!

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் இன்று (மார்ச் 9) நடைபெற்று... மேலும் பார்க்க

ஃபீல்டிங்கில் மோசமான சாதனை படைத்த இந்திய அணி!

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ஃபீல்டிங்கில் மோசமான சாதனை படைத்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் இன்று (மார்ச் 9) நடைபெற்று வருகிறது. இந்தியா மற்... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு 252 ரன்கள் இலக்கு!

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் எடுத்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் இன்று (மார்ச் ... மேலும் பார்க்க

பிரையன் லாராவின் மோசமான சாதனையை சமன்செய்த ரோஹித் சர்மா!

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாராவின் மோசமான சாதனையை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் இன... மேலும் பார்க்க

குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளராக மேத்யூ வேட்!

குஜராத் டைட்டன்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில... மேலும் பார்க்க