செய்திகள் :

சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்லும்; ஐபிஎல் தலைவர் நம்பிக்கை!

post image

சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வெல்லும் என ஐபிஎல் தலைவர் அருண் துமல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளையுடன் நிறைவடைகிறது. துபையில் நாளை (மார்ச் 9) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இதையும் படிக்க: இறுதிப்போட்டிக்கு முன்பாக இந்திய அணிக்கு ரவி சாஸ்திரி கொடுத்த எச்சரிக்கை!

ஐபிஎல் தலைவர் நம்பிக்கை

இந்தியா - நியூசிலாந்து அணிகள் நாளை இறுதிப்போட்டியில் விளையாடவுள்ள நிலையில், நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் என ஐபிஎல் தலைவர் அருண் துமல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாட இந்திய அணிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ச்சியாக 4 இறுதிப்போட்டிகளுக்கு முன்னேறியுள்ளது மிகப் பெரிய விஷயம். கடந்த முறை நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் சில வீரர்களுக்கு அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்திய அணி மற்றுமொரு மிகப் பெரிய ஐசிசி தொடரில் விளையாடி வருகிறது. அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி, இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வெல்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

இதையும் படிக்க: இந்தியாவுக்கு எதிரான தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டதென்ன? நியூசி. வீரர் பதில்!

இதுவரை 4 ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக விளையாடியுள்ள நியூசிலாந்து அணி மூன்று முறை இந்திய அணியை வீழ்த்தி, ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

நியூஸி. சுழலில் இந்தியா திணறல்!

துபை : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணி இந்திய பேட்ஸ்மென்களை ரன் எடுக்க விடாமல் கட்டுப்படுத்தியுள்ளது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: அரைசதம் கடந்து ரோஹித் சர்மா அதிரடி!

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் இன்று (மார்ச் 9) நடைபெற்று... மேலும் பார்க்க

ஃபீல்டிங்கில் மோசமான சாதனை படைத்த இந்திய அணி!

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ஃபீல்டிங்கில் மோசமான சாதனை படைத்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் இன்று (மார்ச் 9) நடைபெற்று வருகிறது. இந்தியா மற்... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு 252 ரன்கள் இலக்கு!

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் எடுத்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் இன்று (மார்ச் ... மேலும் பார்க்க

பிரையன் லாராவின் மோசமான சாதனையை சமன்செய்த ரோஹித் சர்மா!

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாராவின் மோசமான சாதனையை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் இன... மேலும் பார்க்க

குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளராக மேத்யூ வேட்!

குஜராத் டைட்டன்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில... மேலும் பார்க்க