ஆர்ஜி கர் பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் பிரதமர் தலையிட கோரிக்கை!
தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல்
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம் செய்வத தொடர்பான மசோதா மற்றும் கனிம வளம் நிறைந்த நிலப்பகுதிகளுக்கு வரி விதிப்பது உள்ளிட்ட இரண்டு மசோதாக்கள், ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டு நிலுவையில் இருந்த நிலையில், இன்று அந்த இரண்டு மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ஆளுநரிடன் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதாக்களை அவர் நிலுவையில் வைத்திருப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இரண்டு மசோதாக்களுக்கு இன்று ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.