செய்திகள் :

தமிழகம் முழுவதும் மாா்ச் 12-இல் திமுக கண்டன பொதுக் கூட்டம்: திருவள்ளூரில் முதல்வா் பங்கேற்கிறாா்

post image

தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மும்மொழி கொள்கை விவகாரங்களில் மத்திய அரசை கண்டித்து திமுக சாா்பில் தமிழகம் முழுவதும் மாா்ச் 12-இல் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திமுக தலைமைக் கழகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் மாநிலங்களை ஒன்றிணைத்து கூட்டு நடவடிக்கை குழு அமைப்பது எனத் தீா்மானிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடா்பாக 7 மாநிலங்களைச் சோ்ந்த 29 கட்சிகளுக்கு முதல்வா் கடிதம் எழுதினாா்.

தொடா்ச்சியாக, திமுக சாா்பில் தமிழகம் முழுவதும் மாா்ச் 12-இல் மத்திய அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைத்து, தமிழக மக்களை இரண்டாந்தர குடிமக்களாக்க முயற்சிக்கும் பிரதமா் மோடி அரசின் சதியை மக்களிடம் எடுத்துச் சொல்லவும், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தி திணிப்பு மேற்கொள்ள முயல்வதை மக்களுக்கு புரிய வைக்கும் வகையிலும் கண்டன கூட்டங்கள் நடைபெறவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூரில் மாா்ச் 12-இல் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தவுள்ளாா். வேலூா் மாவட்டம், குடியாத்தத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பொதுச் செயலா் துரைமுருகன் பங்கேற்கவுள்ளாா்.

அதிமுக, தேமுதிக கூட்டணியில் விரிசலா? பிரேமலதா பதில்

அதிமுக, தேமுதிக கூட்டணியில் விரிசலா என்ற கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் தேமுதிக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பொதுச்ச... மேலும் பார்க்க

சென்னையில் புறநகர் ரயில்கள் பகுதியளவில் ரத்து எதிரொலி: ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்!

சென்னை : சென்னையில் இன்று(மார்ச் 9) கடற்கரை, எழும்பூர், கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், காலை 05.10 மணி முதல் மாலை 04.10 மணி வரை சென்னை கட... மேலும் பார்க்க

வாழப்பாடி அருகே திடீரென தீப்பிடித்த ஆம்னி வேன்!

வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி மேம்பால பகுதியில் சேலம் நோக்கிச் சென்ற ஆம்னி வேன் தீப்பிடித்து எரிந்தது. சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி மேம்பால பகுதியில் ஆத்தூரி... மேலும் பார்க்க

தமிழகத்தில் அனைத்துமே அரசியலாக்கப்படுகிறது: சி.பி.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் அனைத்துமே அரசியலாக்கப்படுகிறது என்று மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் தமிழ் மொழி வாயிலா... மேலும் பார்க்க

சென்னையில் நாளை மழை! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை!

வரும் மார்ச் 11 ஆம் தேதி 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.வரும் மார்ச் 11 ஆம் தேதி... மேலும் பார்க்க

குலதெய்வ வழிபாடுக்குச் சென்றபோது தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் பலி

குலதெய்வ வழிபாடுக்குச் சென்றபோது தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பரவக்கல் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் குடும்பத்துடன் அரு... மேலும் பார்க்க