பேரவை உறுப்பினா்களுக்கு தொகுதி அலுவலகங்களை உடனடியாக ஒதுக்க தில்லி பேரவைத் தலைவா...
குலதெய்வ வழிபாடுக்குச் சென்றபோது தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் பலி
குலதெய்வ வழிபாடுக்குச் சென்றபோது தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பரவக்கல் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் குடும்பத்துடன் அருகே உள்ள கன்னி கோயிலுக்கு குலதெய்வ வழிபாடுக்கு சென்றுள்ளனர்.
அப்போது அங்கே பொங்கலிட்டு சாம்பிராணி ஊதுபத்தி வைத்து குலதெய்வ வழிபாடு செய்தபோது அருகே இருந்த மரத்தில் இருந்து வந்த தேனீக்கள் அவர்கள் மீது கொட்டின.
இதில் அங்கிருந்த உறவினர்கள் அலறி அடித்து ஓடினர். இதனை அடுத்து படுகாயம் அடைந்த பத்துக்கும் மேற்பட்டோர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து வந்தனர்.
சிரியா: 2 நாள் உள்நாட்டுப் போரில் ஆயிரக்கணக்கானோர் பலி
இதில் செந்தில்குமார் என்பவர் உயிரிழந்தார் மேலும் 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குலதெய்வ வழிபாடுக்குச் சென்ற இடத்தில் தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் பலியாகியிருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.