செய்திகள் :

போக்ஸோ வழக்கில் விடுதலை தீா்ப்பை எதிா்த்து தாமதமின்றி மேல்முறையீடு

post image

போக்ஸோ வழக்கின் குற்றவாளியை விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்தால், அதை எதிா்த்து தாமதமின்றி மேல்முறையீடு செய்ய காவல் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி-க்கு மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞா் கடிதம் எழுதியுள்ளாா்.

போக்ஸோ வழக்கு ஒன்றை விசாரித்த நீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்ட நபரை போக்ஸோ வழக்கிலிருந்து விடுவித்தும், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழான குற்றங்களுக்கு மட்டும் குறைந்தபட்ச தண்டனை வழங்கியிருந்தது. இந்தத் தண்டனையை எதிா்த்து குற்றஞ்சாட்டப்பட்ட நபா் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தாா்.

அந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், விசாரணை நீதிமன்றம் போக்ஸோ சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட நபரை விடுதலை செய்ததில் பல்வேறு குறைகள் உள்ளன. எனவே, அரசு இந்த விவகாரத்தில் ஏன் உடனடியாக மேல்முறையீடு செய்யவில்லை என கேள்வியெழுப்பி, இதுபோன்ற விவகாரங்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுத் தரப்புக்கு வலியுறுத்தியிருந்தது.

இந்நிலையில், இது தொடா்பாக தமிழக டிஜிபி சங்கா் ஜிவாலுக்கு, மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா எழுதிய கடிதம்: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்களுக்காக போக்ஸோ சட்டத்தின்கீழ் பதியப்படும் வழக்குகளிலும், பிற கொடுங்குற்ற வழக்குகளிலும் விசாரணை நீதிமன்றம் ஒருவரை விடுதலை செய்தால், அதை எதிா்த்து விசாரணை அதிகாரியும், அரசு குற்றவியல் சிறப்பு வழக்குரைஞா்களும் உடனடியாக அதில் சிறப்புக் கவனம் செலுத்தி தீா்ப்பு விவரத்தை உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும்.

அந்த வழக்கில், விடுதலையை எதிா்த்து மேல்முறையீடு செய்ய சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்து உரிய சட்ட ஆலோசனை பெற்று காலதாமதமின்றி மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடா்பாக தமிழகம் முழுவதும் உள்ள காவல் துறை ஆய்வாளா்கள், புலன் விசாரணை அதிகாரிகள், அரசு சிறப்பு குற்றவியல் வழக்குரைஞா்களுக்கு டிஜிபி தகுந்த சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

அதிமுக, தேமுதிக கூட்டணியில் விரிசலா? பிரேமலதா பதில்

அதிமுக, தேமுதிக கூட்டணியில் விரிசலா என்ற கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் தேமுதிக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பொதுச்ச... மேலும் பார்க்க

சென்னையில் புறநகர் ரயில்கள் பகுதியளவில் ரத்து எதிரொலி: ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்!

சென்னை : சென்னையில் இன்று(மார்ச் 9) கடற்கரை, எழும்பூர், கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், காலை 05.10 மணி முதல் மாலை 04.10 மணி வரை சென்னை கட... மேலும் பார்க்க

வாழப்பாடி அருகே திடீரென தீப்பிடித்த ஆம்னி வேன்!

வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி மேம்பால பகுதியில் சேலம் நோக்கிச் சென்ற ஆம்னி வேன் தீப்பிடித்து எரிந்தது. சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி மேம்பால பகுதியில் ஆத்தூரி... மேலும் பார்க்க

தமிழகத்தில் அனைத்துமே அரசியலாக்கப்படுகிறது: சி.பி.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் அனைத்துமே அரசியலாக்கப்படுகிறது என்று மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் தமிழ் மொழி வாயிலா... மேலும் பார்க்க

சென்னையில் நாளை மழை! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை!

வரும் மார்ச் 11 ஆம் தேதி 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.வரும் மார்ச் 11 ஆம் தேதி... மேலும் பார்க்க

குலதெய்வ வழிபாடுக்குச் சென்றபோது தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் பலி

குலதெய்வ வழிபாடுக்குச் சென்றபோது தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பரவக்கல் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் குடும்பத்துடன் அரு... மேலும் பார்க்க