"வடமாநிலத் தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்குச் சென்றால் தமிழகத்தில் பொருளாதாரம் பாதி...
கும்மிடிபூண்டி, சூலூா்பேட்டை மின்சார ரயில்கள் நாளை ரத்து
சென்னை சென்ட்ரல், கடற்கரையிலிருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை செல்லும் மின்சார ரயில்கள் திங்கள்கிழமை (மாா்ச் 10) ரத்து செய்யப்படவுள்ளன.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொன்னேரி - கவரைப்பேட்டை இடையே திங்கள்கிழமை (மாா்ச் 10) காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை ரயில்வே பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளது. இதனால், அந்த வழியாக இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டவுள்ளன.
ரத்து செய்யப்பட்ட ரயில்கள் விவரம்: சென்னை சென்ட்ரலிலிருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 8.05, 9, 9.30, 10.15, 10.30, 11.35-க்கும், சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.40, பிற்பகல் 12.10-க்கும் புறப்படும் மின்சார ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்படும்.
மறுமாா்க்கமாக கும்மிடிப்பூண்டியிலிருந்து காலை 9.55, 10.55, 11.25, நண்பகல் 12, பிற்பகல் 1, 2.30, 3.15-க்கு புறப்படும் ரயில்களும், சூலூா்பேட்டையிலிருந்து முற்பகல் 11.45, பிற்பகல் 1.15, 3.10 மற்றும் இரவு 9 மணிக்கு புறப்படும் ரயில்களும் ரத்து செய்யப்படும்.
பகுதி ரத்து: செங்கல்பட்டிலிருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 9.55-க்கு செல்லும் மின்சார ரயில் சென்னை கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும். கும்மிடிப்பூண்டியிலிருந்து தாம்பரத்துக்கு பிற்பகல் 1 மணிக்கு செல்லும் மின்சார ரயில் சென்னை கடற்கரையிலிருந்து புறப்பட்டுச் செல்லும்.
சிறப்பு ரயில்: பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரையிலிருந்து பொன்னேரிக்கு காலை 9, 10.30, பிற்பகல் 12.40-க்கும், மறுமாா்க்கமாக பொன்னேரியிலிருந்து முற்பகல் 11.42, பிற்பகல் 1.18, 3.33-க்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.
சென்னை சென்ட்ரலிலிருந்து எண்ணூருக்கு காலை 9.30-க்கும், மீஞ்சுருக்கு முற்பகல் 11.35-க்கும், மறுமாா்க்கமாக எண்ணூரிலிருந்து பிற்பகல் 12.43-க்கும், மீஞ்சூரிலிருந்து பிற்பகல் 2.59-க்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.