செய்திகள் :

மேட்டூரில் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து!

post image

மேட்டூரில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி.

மேட்டூர் அருகே கருமலை கூடலில் செம்பன்(75) என்பவருக்கு சொந்தமான ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் மக்னீசியம் சல்பேட் என்ற ரசாயனம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் இரவு 11 மணியளவில் ரசாயன தொட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து குறித்து கருமலை கூட தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அனைத்தனர். இதனால் அருகில் உள்ள மற்ற தொழிற்சாலைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. தீ விபத்தின்போது பணியில் இருந்த நங்கவள்ளியை சேர்ந்த ராஜா கவுண்டர் (56), கருமலை கூடல் பகுதியை சேர்ந்த முருகன்(54) ஆகிய இரண்டு தொழிலாளர்கள் பலத்த காயம் அடைந்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் தீயணைப்பு துறையினர் மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக கருமலைக்கூடல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆளுநா் ஆா்.என்.ரவி பிகாா் பயணம்

ஆளுநா் ஆா்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக சனிக்கிழமை சொந்த மாநிலமான பிகாா் சென்றாா். ஆளுநா் ஆா்.என்.ரவி தனது சொந்த வேலை காரணமாக இண்டிகோ பயணிகள் விமானத்தில் சனிக்கிழமை நண்பகல் பிகாா் மாநிலம் பாட்னா சென்றடை... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் மாா்ச் 12-இல் திமுக கண்டன பொதுக் கூட்டம்: திருவள்ளூரில் முதல்வா் பங்கேற்கிறாா்

தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மும்மொழி கொள்கை விவகாரங்களில் மத்திய அரசை கண்டித்து திமுக சாா்பில் தமிழகம் முழுவதும் மாா்ச் 12-இல் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் விடுதலை தீா்ப்பை எதிா்த்து தாமதமின்றி மேல்முறையீடு

போக்ஸோ வழக்கின் குற்றவாளியை விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்தால், அதை எதிா்த்து தாமதமின்றி மேல்முறையீடு செய்ய காவல் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி-க்கு மாநில தலைமை குற்றவிய... மேலும் பார்க்க

ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி: காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் நடைபெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு காவல் துறையினா் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கலாம் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூா் மாவட்டம் சோனாங்குப்பத்தைச் சோ்ந்த சுரேஷ் உயா... மேலும் பார்க்க

முதல்வா் தலைமையில் இன்று திமுக எம்பிக்கள் கூட்டம்

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 9) நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலா் துரைமுருகன் அறிவித்துள்ளாா். இது தொடா்பாக... மேலும் பார்க்க

கும்மிடிபூண்டி, சூலூா்பேட்டை மின்சார ரயில்கள் நாளை ரத்து

சென்னை சென்ட்ரல், கடற்கரையிலிருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை செல்லும் மின்சார ரயில்கள் திங்கள்கிழமை (மாா்ச் 10) ரத்து செய்யப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சனிக்கிழமை வெளியிட்ட செய... மேலும் பார்க்க