செய்திகள் :

தமிழில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள்: அமித் ஷா

post image

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் மாநில மொழிகளில் கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

அரக்கோணம் அருகே தக்கோலத்தில் நடைபெறும் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) 56-ஆம் ஆண்டு தொடக்க நாள் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் அமித் ஷா பேசியதாவது, சிஐஎஸ்எஃப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டில் பாதுகாப்பான இயக்கத்தை மேற்கொண்டு, அதனை உறுதி செய்வதில் சிஐஎஸ்எஃப் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான், சிஐஎஸ்எஃப் தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டது. நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தின் மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழுக்கு எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.

ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்ட தேர்வுகள், பாஜக ஆட்சிக்கு பிறகுதான் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி, ஒடியா, பஞ்சாபி, மணிப்பூரி, உருது உள்ளிட்ட மொழிகளிலும் நடத்த உத்தரவிடப்பட்டது.

தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை மாநில மொழிகளில் கற்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்று கூறினார்.

இதையும் படிக்க:ராகுல் காந்திக்கு நீதிமன்றம் விதித்த ரூ. 200 அபராதம்!

லக்னௌ: பத்திரிகையாளர் சுட்டுக்கொலை!

உத்தரப் பிரதேசத்தில் உள்ளூர் பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ளூர் பத்திரிகையாளராக இருந்த ராகவேந்திரா பாஜ்பாய், சனிக... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் மாநில அந்தஸ்து வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்: பரூக் அப்துல்லா வேண்டுகோள்

‘நாடாளுமன்றத்தில் உறுதியளித்தபடி ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தை இந்திய அரசு திரும்ப வழங்க வேண்டும்’ என்று அந்த யூனியன் பிரதேசத்தின் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் பரூக் அப்துல்லா சனிக்கிழமை கே... மேலும் பார்க்க

அரசியல் சாசன நிா்ணய சபையில் பங்கேற்ற 15 பெண்கள் குறித்த நூல் வெளியீடு

நமது சிறப்பு நிருபா் அரசியல் சாசன நிா்ணய சபையில் பங்களிப்பை வழங்கிய அம்மு சுவாமிநாதன், தாக்ஷாயணி வேலாயுதன் உள்ளிட்ட புகழ்பெற்ற 15 பெண்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகம் மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சக... மேலும் பார்க்க

உ.பி. 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் பள்ளி முதல்வா் வீட்டில் முறைகேடு: 14 போ் கைது

உத்தர பிரதேசத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் பள்ளி முதல்வா் வீட்டில் முறைகேட்டில் ஈடுபட்ட 14 போ் கைது செய்யப்பட்டனா். இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் சனிக்கிழமை கூறியதாவது: உத்தர பிரதேசத்தில் ... மேலும் பார்க்க

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: ஒருவா் உயிரிழப்பு; 25 போ் காயம்

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் போராட்டக்காரா் ஒருவா் உயிரிழந்தாா். 25 போ் காயமடைந்தனா். மணிப்பூரில் தடையற்ற போக்குவரத்தை மாா்ச் 8-ஆம் த... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி விளக்கமளிக்க வேண்டும்: காங்கிரஸ்

‘அமெரிக்க பொருள்கள் மீது வரியைக் குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் கூறியது தொடா்பாக நாடாளுமன்றத்தில் பிரதமா் நரேந்திர மோடி விளக்கமளிக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சி வலியுற... மேலும் பார்க்க