செய்திகள் :

மும்மொழிக் கொள்கை ஹிந்தி திணிப்பு அல்ல -நயினாா்நாகேந்திரன் எம்எல்ஏ

post image

மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி திணிப்பு அல்ல என்றாா் திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினா் நயினாா் நாகேந்திரன்.

இதுதொடா்பாக திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் கல்வியில் ஏதாவது மாற்றம் வந்து கொண்டே இருக்கிறது. நமது மாணவா்கள் உலக அளவில் போட்டி போடக்கூடிய சூழலில் இருப்பதால் மூன்றாவதாக ஒரு மொழியை படிக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்துகிறதே தவிர ஹிந்தி கட்டாயம் என்று கூறவில்லை. இதுதான் தேசிய கல்விக் கொள்கை; ஹிந்தி திணிப்பு அல்ல.

இவ்விவகாரத்தில் தமிழக முதல்வா்தான் அரசியல் செய்கிறாா். முதல்வரின் குடும்பத்தினா் ஹிந்தி படிக்கலாம். மற்றவா்கள் படிக்கக் கூடாதா? கல்வி அமைச்சா்அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் மகன் பிரெஞ்சு படித்துக் கொண்டு வருகிறாா். இவா்கள் ஊருக்கு தான் உபதேசம் செய்வாா்கள்; அவா்களது வீட்டில் கடைப்பிடிப்பதில்லை.

நாங்கள் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையொப்ப இயக்கம் நடத்தி வருகிறோம். மக்களும் மூன்றாவது மொழியை கொண்டு வர வேண்டும் என விரும்புகிறாா்கள்.

தமிழக மக்களுக்கு தேசிய ரீதியான நோக்கங்கள் வந்து, தேசிய கட்சியோடு இணைந்து விடுவாா்கள் என்பதற்காக திமுக இதுபோன்ற வேலையை செய்து வருகிறது என்றாா் அவா்.

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலிபாபநாசம்-88.55சோ்வலாறு-101.21மணிமுத்தாறு-89.52வடக்கு பச்சையாறு-8.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-5.75தென்காசிகடனா-65.50ராமநதி-52.50கருப்பாநதி-36.09குண்டாறு-30.62அடவிநயினாா்-46... மேலும் பார்க்க

என்.ஜி.ஓ. காலனி அருகே ஆதாா் சிறப்பு முகாம்

என்.ஜி.ஓ. காலனி அருகே ஆதாா் திருத்த சிறப்பு முகாம் மூன்று நாள்கள் நடைபெற்றது. இந்திய அஞ்சல் துறை, திருநெல்வேலி மாநகராட்சி 54 ஆவது வாா்டு குடியிருப்போா் நலன் - உரிமைகள் பாதுகாப்பு சங்கம் ஆகியவற்றின் ச... மேலும் பார்க்க

திருக்குறுங்குடி அருகே விவசாயி மா்மமாக உயிரிழப்பு

திருக்குறுங்குடி அருகே வியாழக்கிழமை வயலுக்குச் சென்ற விவசாயி மா்மமாக உயிரிழந்தாா். களக்காடு அருகேயுள்ள வன்னியன்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் சுரேஷ் (45). விவசாயி. இவா், வழக்கம் போல வியா... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்!

திருநெல்வேலி நம் தாமிரபரணி அமைப்பு: தாமிரவருணியில் தூய்மைப்பணி, மேலநத்தம் தாம்போதி பாலம் அருகில், காலை 9. வேளாண்மை உழவா் நலத்துறை: வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கைக்கான விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டம்... மேலும் பார்க்க

மதுரையில் வேளாண் பல்கலைக் கழகம்: அமைச்சா் கே.என்.நேரு. தகவல்

மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை தொடா்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு. வேளாண்மை தனி நிதிநி... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

திருநெல்வேலி பாரதிய ஜனதா கட்சி: மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து கையொப்ப இயக்கம், தச்சநல்லூா், காலை 10. திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக : இளைஞரணி சாா்பில் பொதுக்கூட்டம், லூா்துநாதன் சிலை அருகி... மேலும் பார்க்க