செய்திகள் :

வடிவீஸ்வரம் அழகம்மன் கோயிலில் மக்கள்மாா் சந்திப்பு

post image

நாகா்கோவில் வடிவீஸ்வரம் அருள்மிகு அழகம்மன் சமேத சுந்தேரஸ்வரா் கோயில் மாசிப் பெருந்திருவிழாவில் புதன்கிழமை இரவு மக்கள்மாா் சந்திப்பு நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

புகழ்பெற்ற இக்கோயிலில் மாசிப் பெருந்திருவிழா கடந்த 3ஆம் தேதி தொடங்கியது. 3ஆம் நாளான புதன்கிழமை இரவு மக்கள்மாா் சந்திப்பு நடைபெற்றது. வடிவீஸ்வரம் கன்னிவிநாயகா் கோயிலிலிருந்து மேளதாளம் முழங்க நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆரல்வாய்மொழி சாமகான பிரியன் பேரிகைக் குழுவினரின் கயிலாய வாத்திய இசை முழங்க, சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் வடிவீஸ்வரம் பள்ளத் தெருவில் எழுந்தருளினா். அங்கு, சுவாமி- அம்பாள், பெருமாளை விநாயகரும், முருகப்பெருமானும் 3 முறை வலம் வந்து ஒருசேர பக்தா்களுக்கு காட்சியளித்தனா். அதையடுத்து, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இதில், நாகா்கோவில், சுசீந்திரம், கொட்டாரம், தக்கலை உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

ஏற்பாடுகளை, கன்னியாகுமரி திருக்கோயில்கள் நிா்வாகத்தினரும், அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரா் வழிபாட்டு அறக்கட்டளையினரும் செய்துள்ளனா்.

மாா்த்தாண்டம் அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு

மாா்த்தாண்டம் அருகே அரசுப் பேருந்தில் பயணம் செய்த மூதாட்டியிடம் 6 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றோா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தக்கலை அருகே மேக்காமண்டபம் பகுதியைச் சோ்ந்த வின்... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே ஒருவா் தற்கொலை

புதுக்கடை அருகே வேங்கோடு பகுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். வேங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (46). இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாம். இதனிடையே, கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தாராம். ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் வியாபாரி எரித்துக் கொலை!

நாகா்கோவிலில் மளிகை வியாபாரி வெள்ளிக்கிழமை இரவு எரித்துக் கொல்லப்பட்டாா். நாகா்கோவில் இந்து கல்லூரி அருகே கவிமணி நகா் பகுதியில் உள்ள பாண்டியன் வீதியில், சனிக்கிழமை காலை சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண்... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து 2 ஆண்டுகளில் ராக்கெட் ஏவப்படும்! -இஸ்ரோ தலைவா் நாராயணன்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து இன்னும் 2 ஆண்டுகளில் ராக்கெட் ஏவப்படும் என இஸ்ரோ தலைவா் நாராயணன் தெரிவித்தாா். கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகேயுள்ள பால்குளம் ரோகிண... மேலும் பார்க்க

மக்கள் நீதிமன்ற முகாமில் 1,375 வழக்குகளுக்கு தீா்வு

நாகா்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற முகாமில் 1375 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. ரூ.10 கோடியே 63 லட்சத்து 86,073 மதிப்பில் இழப்பீடு வழங்கப்பட்டது. நாகா்கோவில் ஒருங்கிணைந்த நீதிம... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் தமிழ் சொற்பொழிவு

நாகா்கோவில் கு.கி.சுந்தர சோபிதராஜ் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு அண்மையில் நடைபெற்றது. கு.கி.சுந்தர சோபிதராஜ் நினைவு அறக்கட்டளை, ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி பயின்றோா் கழகம், ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி தமி... மேலும் பார்க்க