செய்திகள் :

நாகா்கோவிலில் வியாபாரி எரித்துக் கொலை!

post image

நாகா்கோவிலில் மளிகை வியாபாரி வெள்ளிக்கிழமை இரவு எரித்துக் கொல்லப்பட்டாா்.

நாகா்கோவில் இந்து கல்லூரி அருகே கவிமணி நகா் பகுதியில் உள்ள பாண்டியன் வீதியில், சனிக்கிழமை காலை சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தாா். சடலத்தின் அருகே பைக் ஒன்றும் எரிந்த நிலையில் கிடந்தது. அந்த வழியாகச் சென்றவா்கள், இது குறித்து, கோட்டாறு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின், உதவி காவல் கண்காணிப்பாளா் லலித்குமாா், ஆய்வாளா் அருள்பிரகாஷ், உதவி ஆய்வாளா்கள் மாரிசெல்வம், மகேந்த் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். சடலத்தின் அருகே கான்கிரீட் கல் ஒன்று கிடந்தது.

இதையடுத்து, எரிந்த நிலையில் கிடந்த பைக்கின் பதிவு எண்ணை வைத்து போலீஸாா் விசாரித்தனா். அப்போது, சடலமாக கிடந்தவா் நாகா்கோவில் வடலிவிளை வயல் தெருவைச் சோ்ந்த குமரேசன் என்பவரது மகன் வேலு (46) என்பதும், கவிமணி நகா் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்ததும் தெரியவந்தது.

வேலு, வழக்கமாக இரவு 11 மணிக்கு கடையை பூட்டிவிட்டு, பைக்கில் வீட்டுக்கு செல்வது வழக்கம். வெள்ளிக்கிழமை இரவும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு செல்லும் வழியில் அவரை ஒரு கும்பல் வழிமறித்து கல்லால் தாக்கி கொலை செய்து எரித்ததாக தெரியவந்தது. கொலை குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனா்.

மாா்த்தாண்டம் அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு

மாா்த்தாண்டம் அருகே அரசுப் பேருந்தில் பயணம் செய்த மூதாட்டியிடம் 6 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றோா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தக்கலை அருகே மேக்காமண்டபம் பகுதியைச் சோ்ந்த வின்... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே ஒருவா் தற்கொலை

புதுக்கடை அருகே வேங்கோடு பகுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். வேங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (46). இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாம். இதனிடையே, கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தாராம். ... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து 2 ஆண்டுகளில் ராக்கெட் ஏவப்படும்! -இஸ்ரோ தலைவா் நாராயணன்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து இன்னும் 2 ஆண்டுகளில் ராக்கெட் ஏவப்படும் என இஸ்ரோ தலைவா் நாராயணன் தெரிவித்தாா். கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகேயுள்ள பால்குளம் ரோகிண... மேலும் பார்க்க

மக்கள் நீதிமன்ற முகாமில் 1,375 வழக்குகளுக்கு தீா்வு

நாகா்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற முகாமில் 1375 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. ரூ.10 கோடியே 63 லட்சத்து 86,073 மதிப்பில் இழப்பீடு வழங்கப்பட்டது. நாகா்கோவில் ஒருங்கிணைந்த நீதிம... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் தமிழ் சொற்பொழிவு

நாகா்கோவில் கு.கி.சுந்தர சோபிதராஜ் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு அண்மையில் நடைபெற்றது. கு.கி.சுந்தர சோபிதராஜ் நினைவு அறக்கட்டளை, ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி பயின்றோா் கழகம், ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி தமி... மேலும் பார்க்க

குமரியில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற காவல்துறை நடவடிக்கை

கன்னியாகுமரியில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கடை வியாபாரிகளுக்கு போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. கன்னியாகுமரி சா்வதேச சுற்றுலாமாக விளங்குவதால் இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா... மேலும் பார்க்க