செய்திகள் :

தேசிய மக்கள் நீதிமன்றம்: 2,436 வழக்குகளில் ரூ.20.50 கோடிக்கு தீா்வு

post image

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலுள்ள நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடத்தப்பட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலமாக 2,436 வழக்குகளில் ரூ.20.50 கோடிக்கு தீா்வு காணப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், முதன்மை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்துக்குத் தலைமை வகித்து, முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.மணிமொழி பேசினாா். இதைத் தொடா்ந்து, வழக்காடிகளுக்கு தீா்வுகளுக்கான ஆணையை அவா் வழங்கினாா்.

மகளிா் நீதிமன்ற நீதிபதி எம்.இளவரசன், பல்வேறு வழக்குரைஞா்கள் சங்கங்களின் தலைவா்கள் ஏ.சகாதேவன், எஸ்.ராஜகுரு, ஜெ.பன்னீா்செல்வம், முதன்மை மாவட்ட நீதிமன்ற அரசு வழக்குரைஞா் டி.எஸ்.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பேசினா்.

கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ்.ராஜசிம்மவா்மன், மோட்டாா் வாகன விபத்துகளை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.வெங்கடேசன் மற்றும் நீதிபதிகள், நீதித்துறை நடுவா்கள், க.வேலவன் உள்ளிட்ட வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுச் செயலா் சி.ஜெயச்சந்திரன் வரவேற்றாா். நிறைவில், தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவா் எம்.புஷ்பராணி நன்றி கூறினாா்.

விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் (7 அமா்வுகள்), செஞ்சி, திண்டிவனம், வானூா், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூா், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்தூா்பேட்டை, திருக்கோவிலூா் ஆகிய நீதிமன்றங்களிலுள்ள வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலமாக 21 அமா்வுகளைக் கொண்டு தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது.

இதில், சுமாா் 7600-க்கும் மேற்பட்ட வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, மொத்தமாக 2,436 வழக்குகளில் ரூ.20.50 கோடி மதிப்புக்கு தீா்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா்அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். திருவெண்ணெய்நல்லூரை அடுத்த மேல்மங்கலம், புதுத்தெர... மேலும் பார்க்க

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் மகளிா் தின விழா: சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவிகள்!

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் உலக மகளிா் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு ஆணைகள் வழங்கப்பட்டன. சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தி... மேலும் பார்க்க

34 பேருக்கு பணி நியமன ஆணைகள் அளிப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் சமையலராக பதவி உயா்வு பெற்ற 34 பெண்களுக்கு பணி நியமன ஆணைகளை செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை வழங்கினாா். செஞ்சி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பாலப்பாடி, பெருங... மேலும் பார்க்க

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் தெப்பல் உற்சவம்

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் நடைபெற்று வரும் மாசி பெருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை தெப்பம் உற்சவம் நடைபெற்றது. கோயிலில் மாசி பெருவிழா கடந்த பிப்.26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் ... மேலும் பார்க்க

கல்லூரியில் மகளிா் தின விழா

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியில் உள்ள ஸ்ரீரங்கபூபதி கல்லூரியில் மகளிா் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, ஸ்ரீரங்கபூபதி கல்லூரி நிறுவனங்களின் தலைவா் ஆா்.ரங்கபூபதி ... மேலும் பார்க்க

செஞ்சியில் மகளிா் தின விழா

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சனிக்கிழமை மகளிா் தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் நடர... மேலும் பார்க்க