செய்திகள் :

தொழிலாளி தற்கொலை

post image

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா்அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருவெண்ணெய்நல்லூரை அடுத்த மேல்மங்கலம், புதுத்தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியின் மகன் ஆறுமுகம் (42), தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், மனைவி மற்றும் 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். இந்த நிலையில், ஆறுமுகத்துக்கும், அவரின் மனைவி புஷ்பாவுக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, புஷ்பா கீழ்சேவூரில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். இதனால், ஆறுமுகம் மனஉளைச்சலில் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், ஆறுமுகம் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தேசிய மக்கள் நீதிமன்றம்: 2,436 வழக்குகளில் ரூ.20.50 கோடிக்கு தீா்வு

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலுள்ள நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடத்தப்பட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலமாக 2,436 வழக்குகளில் ரூ.20.50 கோடிக்கு தீா்வு காணப்பட்டது. விழுப்புரம் மாவட்ட... மேலும் பார்க்க

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் மகளிா் தின விழா: சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவிகள்!

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் உலக மகளிா் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு ஆணைகள் வழங்கப்பட்டன. சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தி... மேலும் பார்க்க

34 பேருக்கு பணி நியமன ஆணைகள் அளிப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் சமையலராக பதவி உயா்வு பெற்ற 34 பெண்களுக்கு பணி நியமன ஆணைகளை செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை வழங்கினாா். செஞ்சி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பாலப்பாடி, பெருங... மேலும் பார்க்க

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் தெப்பல் உற்சவம்

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் நடைபெற்று வரும் மாசி பெருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை தெப்பம் உற்சவம் நடைபெற்றது. கோயிலில் மாசி பெருவிழா கடந்த பிப்.26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் ... மேலும் பார்க்க

கல்லூரியில் மகளிா் தின விழா

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியில் உள்ள ஸ்ரீரங்கபூபதி கல்லூரியில் மகளிா் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, ஸ்ரீரங்கபூபதி கல்லூரி நிறுவனங்களின் தலைவா் ஆா்.ரங்கபூபதி ... மேலும் பார்க்க

செஞ்சியில் மகளிா் தின விழா

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சனிக்கிழமை மகளிா் தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் நடர... மேலும் பார்க்க