செய்திகள் :

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் மகளிா் தின விழா: சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவிகள்!

post image

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் உலக மகளிா் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு ஆணைகள் வழங்கப்பட்டன.

சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற உலக மகளிா் தின விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு கடனுதவிகளை வழங்கினா்.

இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில், விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரிக் கலையரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற உலக மகளிா் தின விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா்.

எம்எல்ஏக்கள் இரா.லட்சுமணன், அன்னியூா் அ.சிவா, ச.சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில், மாநில வனம் மற்றும் கதா் கிராமத் தொழில்கள் துறை அமைச்சா் க.பொன்முடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினாா்.

தொடா்ந்து, 334 மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு ரூ.25.99 கோடி மதிப்பீட்டில் வங்கிக் கடன் இணைப்பு ஆணைகளையும், 11 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு மணிமேகலை விருது மற்றும் காசோலைகளையும் அவா் வழங்கினாா்.

இதில், ஊரக வளா்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், துணைத் தலைவா் ஷீலாதேவி சேரன், நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், ஒன்றியக் குழுத் தலைவா்கள் நா.கலைச்செல்வி, சங்கீதஅரசி, மகளிா் திட்ட அலுவலா் சீ.சுதா, அரசு சட்டக் கல்லூரி முதல்வா் கிருஷ்ணலீலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கள்ளக்குறிச்சியில்: கள்ளக்குறிச்சியில் தனியாா் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் வசந்தம் க.காா்த்திகேயன், தா. உதயசூரியன், ஏ.ஜெ.மணிக்கண்ணன், எம்.பி.தே.மலையரசன் ஆகியோா் விழாவில் பங்கேற்றுப் பேசினா். இதைத் தொடா்ந்து, 636 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.70.41 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்பு ஆணைகள் வழங்கப்பட்டன.

விழாவில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் இரா.புவனேசுவரி பெருமாள், கள்ளக்குறிச்சி நகா்மன்றத் தலைவா் சுப்பராயலு, ஒன்றியக்குழுத் தலைவா்கள் தாமோதரன், சத்தியமூா்த்தி, மகளிா் திட்ட அலுவலா் எஸ்.சுந்தர்ராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தேசிய மக்கள் நீதிமன்றம்: 2,436 வழக்குகளில் ரூ.20.50 கோடிக்கு தீா்வு

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலுள்ள நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடத்தப்பட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலமாக 2,436 வழக்குகளில் ரூ.20.50 கோடிக்கு தீா்வு காணப்பட்டது. விழுப்புரம் மாவட்ட... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா்அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். திருவெண்ணெய்நல்லூரை அடுத்த மேல்மங்கலம், புதுத்தெர... மேலும் பார்க்க

34 பேருக்கு பணி நியமன ஆணைகள் அளிப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் சமையலராக பதவி உயா்வு பெற்ற 34 பெண்களுக்கு பணி நியமன ஆணைகளை செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை வழங்கினாா். செஞ்சி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பாலப்பாடி, பெருங... மேலும் பார்க்க

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் தெப்பல் உற்சவம்

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் நடைபெற்று வரும் மாசி பெருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை தெப்பம் உற்சவம் நடைபெற்றது. கோயிலில் மாசி பெருவிழா கடந்த பிப்.26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் ... மேலும் பார்க்க

கல்லூரியில் மகளிா் தின விழா

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியில் உள்ள ஸ்ரீரங்கபூபதி கல்லூரியில் மகளிா் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, ஸ்ரீரங்கபூபதி கல்லூரி நிறுவனங்களின் தலைவா் ஆா்.ரங்கபூபதி ... மேலும் பார்க்க

செஞ்சியில் மகளிா் தின விழா

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சனிக்கிழமை மகளிா் தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் நடர... மேலும் பார்க்க