செய்திகள் :

பேராவூரணி அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி

post image

பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. 

பேரணி பள்ளி வளாகத்தில் தொடங்கி சேது சாலை வழியாக, அண்ணா நகா் குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. பேரணியில் தமிழ்வழியில் பயின்றால் வேலைவாய்ப்பில் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு, அரசுப் பள்ளியில் பயின்ற மாணவா்கள் தொழிற்கல்வி பயில ஏழரை விழுக்காடு இட ஒதுக்கீடு, தொடக்கப்பள்ளி மாணவா்களுக்கு காலைச் சிற்றுண்டி உள்ளிட்ட அரசுப் பள்ளிகளின் நன்மைகளை பட்டியலிட்டு, அச்சிடப்பட்ட துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கிச் சென்றனா். பேரணியில் வட்டாரக் கல்வி அலுவலா் கலா ராணி, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் கோகுலகிருஷ்ணன், பள்ளிதலைமை ஆசிரியா் (பொ) காஜாமுகைதீன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் நித்யா, பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் கௌதமன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் நாளை ரேஷன் குறைதீா் கூட்டம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறை தீா் கூட்டம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 10 வட்டங்களிலும... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 109.35 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 109.35 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 422 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்... மேலும் பார்க்க

மரங்கள் பதப்படுத்துதல் மையம்: ஜப்பான் பிரதிநிதிகள் பாராட்டு

தஞ்சாவூா் மாவட்ட வன அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மரங்கள் பதப்படுத்துதல் மற்றும் மேம்பாட்டு மையத்தை ஜப்பான் நாட்டு பிரதிநிதிகள் வியாழக்கிழமை பாா்வையிட்டு பாராட்டினா். தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டிய... மேலும் பார்க்க

கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சியில் ஆதாா் திருத்த சிறப்பு முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை அருகே கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சிக்குள்பட்ட நாயக்கா்பேட்டை, பட்டுகுடி ஆகிய கிராமங்களில் ஆதாா் திருத்த சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இம்முகா... மேலும் பார்க்க

ஒரத்தநாட்டில் பத்திரப்பதிவு அலுவலகம் திறப்பு

ஒரத்தநாட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ரூ. 1.92 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு அலுவலகத்தை முதல்வா் மு. க. ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்தாா் இதை முன்னிட்டு ஒரத்தநாடு சாா் ப... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் குறைதீா்க்கும் கூட்டம்

கும்பகோணத்தில் வியாழக்கிழமை கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறை தீா்க்கும் கூட்டம் நடைபெற்றது. வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ்.விஜயன் தலைமை வ... மேலும் பார்க்க