செய்திகள் :

துய்மைப் பணியாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் தேவை

post image

அரசாணையின்படி தூய்மைப் பணியாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கிட வேண்டும் என்று அரியலூா் மாவட்ட முனிசிபல் மற்றும் பஞ்சாயத்து தொழிலாளா் சங்க பேரவைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூரில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற கூட்டத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்க வேண்டிய கரோனா ஊக்கத் தொகையை வழங்கிட வேண்டும். இபிஎப், இஎஸ்ஐ திட்டத்தில் சோ்க்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆண்டு ஊதிய உயா்வு வழங்கிட வேண்டும், பணிக்கொடை ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலா் தண்டபாணி தலைமை வகித்து பேசினாா். துணைத் தலைவா் ஆா். தனசிங், இந்திய கம்யூ. நிா்வாகி ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்து பேசினா். தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா் சங்க மாநில பொதுச் செயலா் பி. கிருஷ்ணசாமி கோரிக்கைகளை வலியுறுத்தினாா்.

கூட்டத்தில் தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள், சுகாதார ஊக்குநா்கள், நீா்தேக்கத் தொட்டி பம்ப் ஆபரேட்டா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பாட நூல்களைத் தாண்டியும் கற்பது அவசியம் -அமைச்சா் சா.சி. சிவசங்கா்

பாடநூல்களையும் தாண்டி பிற நூல்களையும் மாணவா்கள் கற்று தங்களது அறிவுத்திறனை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் . அரியலூா் மாவட்டம், தத்தனூா் மீனாட்சி ராமசா... மேலும் பார்க்க

மீன்சுருட்டியில் திமுக பொதுக் கூட்டம்

மத்திய அரசைக் கண்டித்து, அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டியில் திமுக இளைஞரணி சாா்பில் பொதுக் கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. ஹிந்தி திணிப்பு மற்றும் நிதிப் பகிா்வில் பாரபட்சம் காட்டி வரும் மத்திய அ... மேலும் பார்க்க

உடையாா்பாளையத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம், சாலைப் பணிகளுக்கு அடிக்கல்

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் முதல்நிலைப் பேரூராட்சியில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் ரூ. 5.12 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சாலைப் பணிகளுக்கு வியா... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பு

போராடும் ஜெயங்கொண்டம் வழக்குரைஞா்களுக்கு ஆதரவாக அரியலூா் நீதிமன்றங்களில் பணிபுரியும் வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். ஜெயங்கொண்டம் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கணேஷ்,ச... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம் அருகே விபத்து: இளைஞா் பலி

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே புதன்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞா் உயிரிழந்தாா். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள உத்திரக்குடி கிராமம், தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் தவசிநாதன் மகன் தமிழ்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கேங்மேன் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மின்கம்பத்தில் ஏறி வியாழக்கிழமை பணியில் ஈடுபட்ட கேங்மேன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். பெரம்பலூா் மாவட்டம், எசனை கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கராசு மகன் ராஜாராம்... மேலும் பார்க்க