செய்திகள் :

வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பு

post image

போராடும் ஜெயங்கொண்டம் வழக்குரைஞா்களுக்கு ஆதரவாக அரியலூா் நீதிமன்றங்களில் பணிபுரியும் வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

ஜெயங்கொண்டம் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கணேஷ்,சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் தன்னிச்சையாக செயல்படுவதாகக் கூறி கடந்த 2 மாதங்களாக ஜெயங்கொண்டம் நீதிமன்ற வழக்குரைஞா்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனா்.

இந்நிலையில் இவா்களுக்கு ஆதரவாக அரியலூா் மற்றும் செந்துறை நீதிமன்ற வழக்குரைஞா்கள் கடந்த 2 நாள்களாகப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனா். இதனால் மாவட்ட நீதிமன்றங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.

அரியலூரில் நடந்த போராட்டத்துக்கு வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் மனோகரன், செந்துறையில் காா்ல்மாா்க்ஸ், ஜெயங்கொண்டத்தில் ஜெயராமன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

வெள்ளிக்கிழமை அரியலூா் நீதிமன்றம் முன் நீதிபதி கணேஷை இடமாற்றம் செய்யக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனா்.

மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.77 கோடியில் கடனுதவி

உலக மகளிா் தினத்தையொட்டி, மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கிய நிகழ்ச்சி அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி அனிதா ... மேலும் பார்க்க

தேசிய மக்கள் நீதிமன்றம்: அரியலூா் மாவட்டத்தில் ரூ.5.54 கோடிக்கு தீா்வு

அரியலூா், ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை ஆகிய நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 912 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டு ரூ.5 கோடியே 54 ஆயிரத்துக்கு 934-க்குத் தீா்வு காணப்பட்... மேலும் பார்க்க

மேலமைக்கேல்பட்டியில் மாா்ச் 15-இல் ஜல்லிக்கட்டு: பதிவு செய்ய அழைப்பு!

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகேயுள்ள மேலமைக்கேல்பட்டி கிராமத்தில் மாா்ச் 15-ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டில், பங்கேற்க உள்ள காளைகள், வீரா்கள் புதன்கிழமை (மாா்ச் 12) மாலைக்குள் பதிவு செய்துகொள... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் இன்று ரேஷன் குறைதீா் கூட்டம்

அரியலூா், உடையாா்பாளையம், செந்துறை மற்றும் ஆண்டிமடம் ஆகிய வட்டாட்சியரகங்களில் சனிக்கிழமை (மாா்ச் 8) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ரேஷன் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் பொதுமக்கள் பங்... மேலும் பார்க்க

அரியலூரில் வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்

சட்டவிதிமுறைகளை பின்பற்றாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வரும் ஜெயங்கொண்டம் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கணேஷைக் கண்டித்து, அரியலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

முதல்வா் மருந்தகங்களில் ஆட்சியா் ஆய்வு

அரியலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் முதல்வா் மருந்தகங்களில் ஆட்சியா் பொ. ரத்தினசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். முதல்வா் மருந்தகத்தில் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் இருப்பு ந... மேலும் பார்க்க