செய்திகள் :

பிரதமரின் நிகழ்ச்சிக்கு முதல்முறையாக பாதுகாப்புப் பணியில் முழுவதும் பெண்கள்!

post image

முதல்முறையாக பிரதமர் மோடி கலந்துகொள்ளும் ஒரு நிகழ்ச்சிக்கு முழுவதுமாக பாதுகாப்புப் பணியில் பெண்கள் ஈடுபடவுள்ளனர்.

உலக மகளிர் நாளையொட்டி குஜராத் மாநிலம் நவ்சரி மாவட்டத்தில் நாளை(மார்ச் 8) நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பெண்கள் மத்தியில் உரையாற்றவிருக்கிறார்.

குஜராத்திற்கு பிரதமர் மோடி வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த விழாவிற்கான பாதுகாப்புப் பணிகளில் முழுவதுமாக காவல்துறையைச் சேர்ந்த பெண் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஈடுபடவுள்ளனர்.

பிரதமர் மோடி வருகை முதல் அவர் கலந்துகொள்ளும் விழா நிறைவுபெறும் வரை பெண் காவலர்கள் பணியில் ஈடுபட உள்ளதாக குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தகவல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | குழந்தை குண்டாக இருக்கிறதா? எச்சரிக்கும் மருத்துவர்கள்!

இதுகுறித்து அவர் கூறுகையில், 'உலக மகளிர் நாளையொட்டி, இந்தியாவிலேயே முதல்முறையாக குஜராத் காவல்துறை ஒரு புதிய முயற்சியை முன்னெடுக்கிறது. அதன்படி பிரதமர் மோடி கலந்துகொள்ளும் விழாவுக்கு முழுவதுமாக பெண் அடங்கிய குழு பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளது.

2,100-க்கும் மேற்பட்ட காவலர்கள், 187 உதவி ஆய்வாளர்கள், 61 ஆய்வாளர்கள், 16 டிஎஸ்பி, 5 எஸ்பிக்கள், ஒரு ஐ.ஜி., ஒரு கூடுதல் டிஜிபி அந்தஸ்து அதிகாரி என அனைவரும் பெண்கள்" என்றார்.

குஜராத் மற்றும் தாத்ரா நகர் ஹவேலிக்கு பிரதமர் மோடி இருநாள் (மார்ச் 8,9) பயணமாக செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது.

குடியரசுத் துணைத்தலைவருக்கு நெஞ்சு வலி! எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கருக்கு (73), நள்ளிரவு 2 மணியளவில் ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலியால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது, எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்... மேலும் பார்க்க

ஆர்ஜி கர் பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் பிரதமர் தலையிட கோரிக்கை!

கொல்கத்தா ஆர்ஜி கர் பெண் பயிற்சி மருத்துவரின் கொலை வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி உதவுமாறு, பலியான பெண்ணின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.உலகம் முழுவதும் சனிக்கிழமையில் சர்வதேச மகளிர் நாள் கொண்டாடப... மேலும் பார்க்க

லக்னௌ: பத்திரிகையாளர் சுட்டுக்கொலை!

உத்தரப் பிரதேசத்தில் உள்ளூர் பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ளூர் பத்திரிகையாளராக இருந்த ராகவேந்திரா பாஜ்பாய், சனிக... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் மாநில அந்தஸ்து வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்: பரூக் அப்துல்லா வேண்டுகோள்

‘நாடாளுமன்றத்தில் உறுதியளித்தபடி ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தை இந்திய அரசு திரும்ப வழங்க வேண்டும்’ என்று அந்த யூனியன் பிரதேசத்தின் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் பரூக் அப்துல்லா சனிக்கிழமை கே... மேலும் பார்க்க

அரசியல் சாசன நிா்ணய சபையில் பங்கேற்ற 15 பெண்கள் குறித்த நூல் வெளியீடு

நமது சிறப்பு நிருபா் அரசியல் சாசன நிா்ணய சபையில் பங்களிப்பை வழங்கிய அம்மு சுவாமிநாதன், தாக்ஷாயணி வேலாயுதன் உள்ளிட்ட புகழ்பெற்ற 15 பெண்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகம் மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சக... மேலும் பார்க்க

உ.பி. 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் பள்ளி முதல்வா் வீட்டில் முறைகேடு: 14 போ் கைது

உத்தர பிரதேசத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் பள்ளி முதல்வா் வீட்டில் முறைகேட்டில் ஈடுபட்ட 14 போ் கைது செய்யப்பட்டனா். இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் சனிக்கிழமை கூறியதாவது: உத்தர பிரதேசத்தில் ... மேலும் பார்க்க