செய்திகள் :

நடுவருடன் வாக்குவாதம்: விதிகளை மீறிய ஹர்மன்பிரீத் கௌருக்கு அபராதம்!

post image

மகளிர் பிரீமியர் லீக்கில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நடத்தை விதிகளை மீறிய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது மகளிர் பிரீமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் மொத்தம் 5 அணிகள் இடம்பெற்றுள்ளன.

உத்தரப் பிரதேசத்தின் லக்னௌவில் நேற்றிரவு நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், போட்டிக் கட்டணத்தில் இருந்து 10 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மீண்டும் பிசிசிஐ ஒப்பந்தத்தில் ஷ்ரேயஸ் ஐயர்?

மெதுவாக பந்துவீசியதால் 19-வது ஓவரின் போது மூன்று பேர் மட்டும் வட்டத்திற்கு வெளியே நிற்க வேண்டும் என்று நடுவர் அஜிதேஷ் அர்கால் அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்து ஹர்மன்பிரீத் கௌர் மற்றும் நியூசிலாந்தைச் சேர்ந்த பந்துவீச்சாளர் அமெலீயா கெர் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹர்மன்பிரீத் கௌர் லெவல் -1 குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், அவர் சட்டப்பிரிவு 2.8-ஐயும் மீறியுள்ளார். இதனால், லெவல்-1 விதிமீறல்களுக்கு, போட்டி நடுவரின் முடிவே இறுதியானது என்று தெரிவிக்கப்பட்டு அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மீண்டும் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ்! இங்கிலாந்து அணியின் நிர்வாக இயக்குநர் பேட்டி!

இன்று இறுதி ஆட்டம்; இந்தியா - நியூஸிலாந்து பலப்பரீட்சை

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 9) பலப்பரீட்சை நடத்தவுள்ளன.இரு முறை சாம்பியனான (2013, 2022) இந்திய அணி 3-ஆவது கோப்பைக்கு... மேலும் பார்க்க

காயம் காரணமாக விலகிய வேகப் பந்துவீச்சாளர்; மும்பை இந்தியன்ஸில் இணைந்த ஆல்ரவுண்டர்!

காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய லிஸாத் வில்லியம்ஸுக்குப் பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆல்ரவுண்டரான கார்பின் போஸ்ச் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி ... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபியுடன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஓய்வா? ஷுப்மன் கில் பதில்!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருடன் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஓய்வுபெற உள்ளார்களா என்பது குறித்து அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.கடந்த மாதம் தொடங்கிய ஐசிசி... மேலும் பார்க்க

வங்கதேசம் - ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியீடு!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அட்டவணையை வங்கதேச கிரிக்கெட் வாரியம் இன்று (மார்ச் 8) வெளியிட்டுள்ளது.ஜிம்பாப்வே அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொ... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்லும்; ஐபிஎல் தலைவர் நம்பிக்கை!

சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வெல்லும் என ஐபிஎல் தலைவர் அருண் துமல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளையுடன் நிறைவடைகிறது. துபையில் நாளை (மார்ச் 9) நடைபெறும் இற... மேலும் பார்க்க

இறுதிப்போட்டிக்கு முன்பாக இந்திய அணிக்கு ரவி சாஸ்திரி கொடுத்த எச்சரிக்கை!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொ... மேலும் பார்க்க