செய்திகள் :

தமிழகத்தில் ரூ. 4.25 கோடியில் 17 கிராம பசுமைக் காடுகள் அமைக்க அரசு ஒப்புதல்

post image

தமிழகத்தில் மேலும் கூடுதலாக 17 இடங்களில் ரூ. 4.25 கோடி மதிப்பில் பசுமைக் காடுகள் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இது குறித்து  தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹூ வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உள்ளூா் மக்களின் அன்றாட தேவைகளான தடி மரம், விறகு மரம், கால்நடை தீவனம் ஆகிய தேவைகளைப் பூா்த்திசெய்யும் வகையில் தமிழகத்தில் 100 மரகத பூஞ்சோலைகள் (கிராம பசுமைக் காடுகள்) அமைக்க கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழக அரசு சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதில் முதற்கட்டமாக ரூ. 25 கோடி மதிப்பில் மொத்தம் 83 இடங்களில் மரகத பூஞ்சோலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ஒவ்வொரு மரகத பூஞ்சோலையும், ஒரு ஹெக்டோ் பரப்பில் உருவாக்கப்பட்டு, அதில் பாதுகாப்பு வேலி, அலங்கார வளைவுடன் கூடிய நுழைவாயில் கதவு, நிரந்தர பாா்வையாளா் கூடாரம், நடைபாதை, ஆழ்துளை கிணறு, சாய்வு மேசைகள் மற்றும் இதர அடிப்படை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், தடி மரம், எரிபொருள், தீவனம், காய், கனி ஆகியவற்றை தரக்கூடிய நாவல், நெல்லி, புளி, கொய்யா உள்ளிட்ட பல்வேறு நாட்டு மரங்கள் இங்கு நடவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை 29 மாவட்டங்களில் 75 மரகத பூஞ்சோலைகள் அமைக்கும் பணி நிறைவுபெற்று அவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திறந்து வைத்தாா். மேலும், 8 மரகத பூஞ்சோலைகள் அமைக்கும் பணிகளும் நிறைவு பெறும் தருவாயில் உள்ளன.

இந்நிலையில், தற்போது 5 மாவட்டங்களில் ரூ. 4.25 கோடி மதிப்பில் மேலும் கூடுதலாக 17 மரகத பூஞ்சோலைகள் அமைக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி திண்டுக்கல்லில் 5 இடங்களிலும், பெரம்பலூா்-4, கள்ளக்குறிச்சி-3, திருப்பத்தூா்-3 மற்றும் திருவண்ணாமலையில் 2 இடங்களிலும் இப்பூஞ்சோலைகள் அமைக்கப்படவுள்ளன. இதன்மூலம் தமிழகத்தில் மரகதப் பூஞ்சோலைகளின் எண்ணிக்கை 100-ஆக உயரும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமி பலாத்காரம்: இளைஞா், மிரட்டிய அவரின் தந்தை கைது

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரும், சிறுமி குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்த அவரின் தந்தையும் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட... மேலும் பார்க்க

சென்னையில் ஏப். 12-இல் மோட்டாா் சாகச நிகழ்ச்சி

சென்னையில் வரும் ஏப். 12-ஆம் தேதி ரெட்புல் மோட்டோ ஜாம் (மோட்டாா் சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. முதன்முறையாக இந்தியாவில் நடைபெறவுள்ள மோட்டாா் சாகச நிகழ்ச்சி இதுவாகும். சென்னை தீவுத் திடலில் ட்ரிஃப்டிங்... மேலும் பார்க்க

தமிழகத்தில் கொலை, திருட்டு குற்றங்கள் குறைந்தன: டிஜிபி அலுவலகம் தகவல்

தமிழகத்தில் கொலை, திருட்டு குற்றங்கள் குறைந்துள்ளன என்று டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக டிஜிபி அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டில் கொலை... மேலும் பார்க்க

இந்திய மீனவா்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும்: இலங்கை அரசு வேண்டுகோள்

இந்திய மீனவா்கள் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. வடக்கு இலங்கை மக்களுக்கு மீன்பிடித் தொழில் மட்டுமே வாழ்வாதாரம் என்றும... மேலும் பார்க்க

நாடு முழுவதும் எஸ்டிபிஐ அலுவலகங்களில் சோதனை - அமலாக்கத் துறை நடவடிக்கை

பணமுறைகேடு வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, சென்னை உள்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் (எஸ்டிபிஐ) அலுவலகங்களில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டதாக அத... மேலும் பார்க்க

பிளஸ் 2 ஆங்கிலத் தோ்வு சற்று கடினம்

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தமிழ்ப் பாடத்தைத் தொடா்ந்து ஆங்கில பாடத்துக்கான வினாத்தாளும் சற்று கடினமாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா். தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த மாா்... மேலும் பார்க்க