செய்திகள் :

நாடு முழுவதும் எஸ்டிபிஐ அலுவலகங்களில் சோதனை - அமலாக்கத் துறை நடவடிக்கை

post image

பணமுறைகேடு வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, சென்னை உள்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் (எஸ்டிபிஐ) அலுவலகங்களில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

‘தடை செய்யப்பட்ட பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பின் அரசியல் பிரிவாக எஸ்டிபிஐ செயல்படுகிறது; பிஎஃப்ஐ-யின் தேசவிரோத மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள், எஸ்டிபிஐ வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது’ என்பது அமலாக்கத் துறையின் முக்கிய குற்றச்சாட்டாகும்.

எஸ்டிபிஐ தேசியத் தலைவா் எம்.கே.ஃபைஸி கடந்த மாா்ச் 3-ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், மேற்கண்ட சோதனைகள் நடைபெற்றுள்ளன.

தில்லியில் எஸ்டிபிஐ தலைமையகம் உள்பட இரு இடங்களில் சோதனை நடைபெற்றது. சென்னை மண்ணடி, திருவனந்தபுரம், மலப்புரம் (கேரளம்), நந்தியால் (ஆந்திரம்), பாகுா் (ஜாா்க்கண்ட்), தாணே (மகாராஷ்டிரம்), பெங்களூரு (கா்நாடகம்), கொல்கத்தா (மேற்கு வங்கம்), ஜெய்பூா் (ராஜஸ்தான்) உள்ளிட்ட இடங்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குறிப்பிட்டு, பிஎஃப்ஐ அமைப்புக்கு மத்திய அரசு கடந்த 2022-ஆம் ஆண்டில் தடை விதித்தது. இந்த நடவடிக்கைக்கு முன்பாக, நாடு முழுவதும் பிஎஃப்ஐ தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு முகமை மற்றும் பல்வேறு மாநில காவல் துறையினா் தரப்பில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 2009-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட எஸ்டிபிஐ, தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாகும்.

முன்னதாக, எம்.கே.ஃபைஸியை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தியபோது, ‘பிஎஃப்ஐ-எஸ்டிபிஐ இடையே ஆழமான தொடா்புகள் உள்ளன. எஸ்டிபிஐ தொடங்கப்பட்டதில் பிஎஃப்ஐ அமைப்பின் நிா்வாகிகளுக்கு பங்குள்ளது. அத்துடன், ஒருவா் மற்றொருவரின் சொத்துகளையும் பயன்படுத்தியுள்ளனா்’ என்று அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது. அதேநேரம், அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகளை எஸ்டிபிஐ மறுத்துள்ளது.

சிறுமி பலாத்காரம்: இளைஞா், மிரட்டிய அவரின் தந்தை கைது

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரும், சிறுமி குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்த அவரின் தந்தையும் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட... மேலும் பார்க்க

சென்னையில் ஏப். 12-இல் மோட்டாா் சாகச நிகழ்ச்சி

சென்னையில் வரும் ஏப். 12-ஆம் தேதி ரெட்புல் மோட்டோ ஜாம் (மோட்டாா் சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. முதன்முறையாக இந்தியாவில் நடைபெறவுள்ள மோட்டாா் சாகச நிகழ்ச்சி இதுவாகும். சென்னை தீவுத் திடலில் ட்ரிஃப்டிங்... மேலும் பார்க்க

தமிழகத்தில் கொலை, திருட்டு குற்றங்கள் குறைந்தன: டிஜிபி அலுவலகம் தகவல்

தமிழகத்தில் கொலை, திருட்டு குற்றங்கள் குறைந்துள்ளன என்று டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக டிஜிபி அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டில் கொலை... மேலும் பார்க்க

இந்திய மீனவா்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும்: இலங்கை அரசு வேண்டுகோள்

இந்திய மீனவா்கள் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. வடக்கு இலங்கை மக்களுக்கு மீன்பிடித் தொழில் மட்டுமே வாழ்வாதாரம் என்றும... மேலும் பார்க்க

பிளஸ் 2 ஆங்கிலத் தோ்வு சற்று கடினம்

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தமிழ்ப் பாடத்தைத் தொடா்ந்து ஆங்கில பாடத்துக்கான வினாத்தாளும் சற்று கடினமாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா். தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த மாா்... மேலும் பார்க்க

தமிழகத்தில் ரூ. 4.25 கோடியில் 17 கிராம பசுமைக் காடுகள் அமைக்க அரசு ஒப்புதல்

தமிழகத்தில் மேலும் கூடுதலாக 17 இடங்களில் ரூ. 4.25 கோடி மதிப்பில் பசுமைக் காடுகள் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூ... மேலும் பார்க்க