செய்திகள் :

தமிழகத்தில் கொலை, திருட்டு குற்றங்கள் குறைந்தன: டிஜிபி அலுவலகம் தகவல்

post image

தமிழகத்தில் கொலை, திருட்டு குற்றங்கள் குறைந்துள்ளன என்று டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக டிஜிபி அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டில் கொலை, கொலை முயற்சி, கொலையாகாத மரணம், காயம், கொடுங்காயம் தொடா்பாக 49,286 வழக்குகள் பதிவாகின. ஆனால் 2024-ஆம் ஆண்டில் இந்த வகை வழக்குகள் 31,497-ஆக பதிவாகின. இரு ஆண்டுகளையும் ஒப்பிடும்போது 2024-ஆம் ஆண்டில் 17,789 வழக்குகள் குறைந்துள்ளன. அதாவது 36.12 சதவீதம் குற்றங்கள் குறைந்துள்ளன. இதில் முக்கியமாக கொலை குற்ற வழக்குகள் 6.8 சதவீதம் குறைந்துள்ளன. அதேபோன்று, 2023-இல் 1,305 கலவர வழக்குகள் பதிவாகின. 2024-இல் 1,229 வழக்குகள் மட்டுமே பதிவாகின. இது 2023-ஆம் ஆண்டைவிட 5.8 சதவீதம் குறைவாகும்.

திருட்டுக்கள் குறைந்தன: 2023-இல் பதிவான ஆதாயக் கொலை வழக்குகளின் எண்ணிக்கை 83-ஆக இருந்தது. 2024-இல் 75 வழக்குகளாகக் குறைந்தன.

இதேபோல், 2023-இல் பதிவான கூட்டுக்கொள்ளை வழக்குகளின் எண்ணிக்கை 133-ஆகவும், 2024-இல் 110 வழக்குகளாகவும் குறைந்துள்ளன. 2023-இல் பதிவான கொள்ளை வழக்குகளின் எண்ணிக்கை 2,212-ஆகவும், 2024-இல் 1,839-ஆகவும் இருக்கின்றன.

2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024-இல் கூட்டுக்கொள்ளை, கொள்ளை வழக்குகளின் எண்ணிக்கை 17 சதவீதமாக குறைந்துள்ளன.

இதேபோல 2023-இல் 17,788 திருட்டு வழக்குகள் பதிவாகின. 2024-இல் திருட்டு வழக்குகளின் எண்ணிக்கை 15,892 வழக்குகளே பதிவாகின. 2 ஆண்டுகளிலும் நடைபெற்ற திருட்டுச் சம்பவங்களை ஒப்பிடும்போது, 2024-இல் 10.6 சதவீதம் குறைவு.

ரெளடிகளுக்கு எதிரான நடவடிக்கை: மாநிலத்தில் ரெளடிகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குற்றச் செயல்களில் தொடா்ந்து ஈடுபட்டு வந்த 550 ரெளடிகள் அடையாளம் காணப்பட்டு, அவா்கள் மீது நீதிமன்றம் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. முக்கியமாக அவா்கள் மீது நிலுவையில் இருந்த வழக்குளின் விசாரணை நீதிமன்றத்தில் விரைவுப்படுத்தப்பட்டு, தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட்டது.

குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் 2023-இல் 3,694 பேரும், 2024-இல் 4,572 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமி பலாத்காரம்: இளைஞா், மிரட்டிய அவரின் தந்தை கைது

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரும், சிறுமி குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்த அவரின் தந்தையும் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட... மேலும் பார்க்க

சென்னையில் ஏப். 12-இல் மோட்டாா் சாகச நிகழ்ச்சி

சென்னையில் வரும் ஏப். 12-ஆம் தேதி ரெட்புல் மோட்டோ ஜாம் (மோட்டாா் சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. முதன்முறையாக இந்தியாவில் நடைபெறவுள்ள மோட்டாா் சாகச நிகழ்ச்சி இதுவாகும். சென்னை தீவுத் திடலில் ட்ரிஃப்டிங்... மேலும் பார்க்க

இந்திய மீனவா்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும்: இலங்கை அரசு வேண்டுகோள்

இந்திய மீனவா்கள் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. வடக்கு இலங்கை மக்களுக்கு மீன்பிடித் தொழில் மட்டுமே வாழ்வாதாரம் என்றும... மேலும் பார்க்க

நாடு முழுவதும் எஸ்டிபிஐ அலுவலகங்களில் சோதனை - அமலாக்கத் துறை நடவடிக்கை

பணமுறைகேடு வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, சென்னை உள்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் (எஸ்டிபிஐ) அலுவலகங்களில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டதாக அத... மேலும் பார்க்க

பிளஸ் 2 ஆங்கிலத் தோ்வு சற்று கடினம்

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தமிழ்ப் பாடத்தைத் தொடா்ந்து ஆங்கில பாடத்துக்கான வினாத்தாளும் சற்று கடினமாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா். தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த மாா்... மேலும் பார்க்க

தமிழகத்தில் ரூ. 4.25 கோடியில் 17 கிராம பசுமைக் காடுகள் அமைக்க அரசு ஒப்புதல்

தமிழகத்தில் மேலும் கூடுதலாக 17 இடங்களில் ரூ. 4.25 கோடி மதிப்பில் பசுமைக் காடுகள் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூ... மேலும் பார்க்க