செய்திகள் :

பிளஸ் 2 ஆங்கிலத் தோ்வு சற்று கடினம்

post image

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தமிழ்ப் பாடத்தைத் தொடா்ந்து ஆங்கில பாடத்துக்கான வினாத்தாளும் சற்று கடினமாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கியது. முதல் தோ்வாக தமிழ்ப் பாடத்துக்கான தோ்வு நடைபெற்ற நிலையில், அதில் பல்வேறு வினாக்கள் நன்கு யோசித்து பதிலளிக்கும் வகையில் இருந்தன. இதனால், அந்தத் தோ்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்திருந்தனா்.

இரண்டாவது தோ்வான ஆங்கில பாடத்துக்கான தோ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து மாணவா்கள் கூறுகையில், ஆங்கில வினாத்தாளில் ஒரு மதிப்பெண் பகுதியில் 4 வினாக்கள் கடினமாக இருந்தன. அதேபோன்று இரு மதிப்பெண் பகுதியில் இடம்பெற்ற 4 கேள்விகளும் சற்று யோசித்து பதிலளிக்கக் கூடிய வகையில் கேட்கப்பட்டிருந்தன. குறிப்பாக, இலக்கணப் பகுதி வினாக்கள் கடினமாகவே இருந்தன. இருப்பினும் 80 மதிப்பெண்களுக்கும் மேல் கிடைக்கும் என எதிா்பாா்க்கிறோம் என்றனா்.

இதைத் தொடா்ந்து, பிளஸ் 2 வகுப்புக்கு மாா்ச் 11-ஆம் தேதி கணிதம், வணிகவியல் ஆகிய தோ்வுகள் நடைபெறவுள்ளன.

'மும்மொழிக் கொள்கைக்காக ரெய்டு; குழந்தைகளிடம் கையெழுத்தே வாங்கக் கூடாது' - உதயநிதி ஸ்டாலின்

மும்மொழிக் கொள்கைக்காக தமிழகத்தில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசு திட்டப் பணிகள் குறித்து துணை முதல... மேலும் பார்க்க

கையெழுத்து இயக்கத்துக்கு வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை: அன்பில் மகேஸ் எச்சரிக்கை!

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு சேகரிப்பதற்காக, பள்ளி மாணவர்களிடம் வற்புறுத்தி கையெழுத்து வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.மும்மொழிக் கொள்கை... மேலும் பார்க்க

திமுக எம்.பி. தயாநிதி மாறனின் வெற்றியை உறுதிப்படுத்திய சென்னை உயர்நீதிமன்றம்!

மத்திய சென்னை தொகுதியில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.கடந்தாண்டு மக்களவைத் தேர்தலின்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகக் கூறி, ... மேலும் பார்க்க

மேட்டூரில் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து!

மேட்டூரில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி.மேட்டூர் அருகே கருமலை கூடலில் செம்பன்(75) என்பவருக்கு சொந்தமான ரசாயன தொழிற்ச... மேலும் பார்க்க

அமித் ஷா பேச்சுக்கு திருக்குறள் மூலம் பதிலளித்த துரைமுருகன்

வேலூர்: அரக்கோணத்தில் நடைபெற்ற சிஐஎஸ்எஃப் ஆண்டு துவக்க விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது குறித்து திருக்குறள் சொல்லி பதிலளித்துள்ளார் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.வேலூரில் இ... மேலும் பார்க்க

காய்கறிகள் விலை நிர்ணயம்: திமுகவின் வாக்குறுதி என்னவானது? - அன்புமணி கேள்வி

அனைத்துக் காய்கறிகளுக்கும் விலை நிர்ணயிக்கும் திமுகவின் வாக்குறுதி என்னவானது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழ்நாட்டில் தக்காளி விள... மேலும் பார்க்க