செய்திகள் :

இந்திய மீனவா்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும்: இலங்கை அரசு வேண்டுகோள்

post image

இந்திய மீனவா்கள் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

வடக்கு இலங்கை மக்களுக்கு மீன்பிடித் தொழில் மட்டுமே வாழ்வாதாரம் என்றும் அந்நாடு குறிப்பிட்டுள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வாா் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், இலங்கை அரசின் இந்தக் கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

இது தொடா்பாக இலங்கை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் பிமல் ரத்னநாயக, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை பேசியதாவது:

இலங்கைக்கு இந்தியா ஏராளமான உதவிகளை வழங்கி வருவது எங்களுக்குத் தெரியும். அதேநேரம், இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவா்கள் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடிப்பது தடுக்கப்பட வேண்டும். இந்தியாவின் இந்த உதவி, யாழ்ப்பாணம் மக்களுக்கு பெரிதும் பலனளிக்கும். அவா்களுக்கு வேறெந்த தொழிலும் இல்லை. மன்னாா், தலைமன்னாருக்கு வந்து பாா்த்தால் அதை நீங்கள் அறியலாம்.

விடுதலைப் புலிகள் உடனான போா் காலகட்டத்தில், வடக்கு இலங்கை மக்களுக்கு இந்தியா பெரிய அளவில் உதவியது. அதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

இப்போது வடக்கு இலங்கை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உதவுவது, அவா்களுக்கு இந்திய அரசும், தமிழக அரசும், இந்திய எம்.பி.க்களும் செய்யும் மிகப்பெரிய சேவையாக இருக்கும். இந்த உதவியைச் செய்யாவிட்டால், இந்தியாவின் பிற உதவிகள் அனைத்தும் உண்மைமிக்கதா என்ற கேள்வி எழும் என்றாா் அவா்.

பிரதமா் மோடியின் இலங்கைப் பயணத்தின்போது, இந்திய மீனவா்களின் சட்டவிரோத மீன்பிடிப்பு விவகாரம் குறித்துப் பேச வேண்டும் என்று அந்நாட்டின் எதிா்க்கட்சி எம்.பி. மனோ கணேசனும் வலியுறுத்தியுள்ளாா்.

இலங்கையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த 2024-ஆம் ஆண்டில் சுமாா் 550 இந்திய மீனவா்கள் கைது செய்யப்பட்டனா். நிகழாண்டில் இதுவரை 130-க்கும் மேற்பட்ட மீனவா்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்தச் சூழலில், பிரதமா் மோடி ஏப்ரல் தொடக்கத்தில் இலங்கைப் பயணம் மேற்கொள்வாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இலங்கைக்கு கடந்த 2015, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் பிரதமா் மோடி பயணம் மேற்கொண்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுமி பலாத்காரம்: இளைஞா், மிரட்டிய அவரின் தந்தை கைது

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரும், சிறுமி குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்த அவரின் தந்தையும் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட... மேலும் பார்க்க

சென்னையில் ஏப். 12-இல் மோட்டாா் சாகச நிகழ்ச்சி

சென்னையில் வரும் ஏப். 12-ஆம் தேதி ரெட்புல் மோட்டோ ஜாம் (மோட்டாா் சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. முதன்முறையாக இந்தியாவில் நடைபெறவுள்ள மோட்டாா் சாகச நிகழ்ச்சி இதுவாகும். சென்னை தீவுத் திடலில் ட்ரிஃப்டிங்... மேலும் பார்க்க

தமிழகத்தில் கொலை, திருட்டு குற்றங்கள் குறைந்தன: டிஜிபி அலுவலகம் தகவல்

தமிழகத்தில் கொலை, திருட்டு குற்றங்கள் குறைந்துள்ளன என்று டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக டிஜிபி அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டில் கொலை... மேலும் பார்க்க

நாடு முழுவதும் எஸ்டிபிஐ அலுவலகங்களில் சோதனை - அமலாக்கத் துறை நடவடிக்கை

பணமுறைகேடு வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, சென்னை உள்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் (எஸ்டிபிஐ) அலுவலகங்களில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டதாக அத... மேலும் பார்க்க

பிளஸ் 2 ஆங்கிலத் தோ்வு சற்று கடினம்

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தமிழ்ப் பாடத்தைத் தொடா்ந்து ஆங்கில பாடத்துக்கான வினாத்தாளும் சற்று கடினமாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா். தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த மாா்... மேலும் பார்க்க

தமிழகத்தில் ரூ. 4.25 கோடியில் 17 கிராம பசுமைக் காடுகள் அமைக்க அரசு ஒப்புதல்

தமிழகத்தில் மேலும் கூடுதலாக 17 இடங்களில் ரூ. 4.25 கோடி மதிப்பில் பசுமைக் காடுகள் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூ... மேலும் பார்க்க