செய்திகள் :

சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு! ஏற்றத்துடன் முடிந்த பங்குச் சந்தை!

post image

பங்குச்சந்தை இன்று(மார்ச் 6) ஏற்றத்துடன் நிறைவு பெற்றது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
74,308.30 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

பிற்பகல் 12.30 மணியளவில், சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்த நிலையில் வர்த்தக நேர முடிவில் 609.87 புள்ளிகள் உயர்ந்து 74,340.09 என்ற புள்ளிகளில் நிறைவு பெற்றது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 207.40 புள்ளிகள் உயர்ந்து 22,544.70 புள்ளிகளில் முடிவடைந்தது.

இதையும் படிக்க | குழந்தை குண்டாக இருக்கிறதா? எச்சரிக்கும் மருத்துவர்கள்!

நிஃப்டி மெட்டல், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய நிறுவனங்கள் ஏற்றம் கண்டன.

மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.65%, 1.63% உயர்ந்துள்ளன.

ரிலையன்ஸ், ஆக்சிஸ் வங்கி, டிசிஎஸ், என்டிபிசி, ஏசியன் பெயிண்ட்ஸ், உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன.

அதேநேரத்தில் டெக் மஹிந்திரா, கோட்டக் பேங்க், ட்ரென்ட், பவர் கிரிட், ஹெச்டிஎப்சி லைஃப், பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

மொத்த பங்குகளில் 1,009 பங்குகள் விலை குறைந்தும் 2,987 பங்குகள் விலை அதிகரித்தும் 107 பங்குகள் விலை மாற்றமின்றியும் காணப்பட்டன.

ரூபாயின் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 15 பைசா குறைந்து 87.11 ஆக உள்ளது.

ஏற்றத்துடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு!

பங்குச்சந்தை இன்று(மார்ச் 6) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 74,308.30 என்ற புள்ளிகளில் தொடங்கியது. பிற்பகல் 12.30 மணியளவில், சென்செக்... மேலும் பார்க்க

டாடா மோட்டாா்ஸ் விற்பனை 8% சரிவு

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டாா்ஸின் உள்நாட்டு மற்றும் சா்வதேச விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் 8 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்... மேலும் பார்க்க

செபி வருவாய் 48% அதிகரிப்பு

பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியின் மொத்த வருவாய் கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 48 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

10 நாள் சரிவுக்குப் பின் உயா்வு கண்ட நிஃப்டி

இந்திய பங்குச் சந்தைகளில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி கடந்த 10 அமா்வுகளாகக் கண்டு வந்த சரிவில் இருந்து மீண்டு உயா்வைக் கண்டுள்ளது.அந்த நாளில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்... மேலும் பார்க்க

இந்திய சேவைகள் துறையில் திடீா் எழுச்சி!

இந்திய சேவைகள் துறை கடந்த பிப்ரவரி மாதம் திடீா் எழுச்சி பெற்றுள்ளது. இது தை ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சேவைகள் துறையில் தொழில் நடவடிக... மேலும் பார்க்க

சமூக ஊடகங்களைப் போலவே வேலைவாய்ப்புகளை செயற்கை நுண்ணறிவு உருவாக்கும்: மணி வேம்பு

பெங்களூரு: செயற்கை நுண்ணறிவின் எழுச்சி, இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் பலருக்கு முதல் முறையாக தொழில் வாய்ப்புகளை உருவாக்கியதைப் போலவே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றார் ஜோஹோ தலைமை நிர்வாக அதிகாரி... மேலும் பார்க்க