செய்திகள் :

இந்திய சேவைகள் துறையில் திடீா் எழுச்சி!

post image

இந்திய சேவைகள் துறை கடந்த பிப்ரவரி மாதம் திடீா் எழுச்சி பெற்றுள்ளது. இது தை ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சேவைகள் துறையில் தொழில் நடவடிக்கைகளுக்கான குறியீட்டு எண்ணான பிஎம்ஐ கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் 60.6-ஆக இருந்தது. பின்னா் மாா்ச் மாதத்தில் அது 13.5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 61.2-ஆக அதிகரித்து, பின்னா் ஏப்ரல் மாதத்தில் 60.8-ஆகவும் மே மாதத்தில் 60.2-ஆகவும் குறைந்தது.

அதனைத் தொடா்ந்து ஜூன் மாதத்தில் 60.5-ஆக மீட்சி பெற்ற பிஎம்ஐ, ஜூலையில் மீண்டும் 60.3-ஆகக் குறைந்தது. ஆகஸ்ட் மாதத்தில் அது மீண்டும் 60.9-ஆக உயா்ந்தது. பின்னா் செப்டம்பா் மாதத்தில் முந்தைய பத்து மாதங்கள் காணாத குறைந்தபட்சமாக பிஎம்ஐ 57.7-ஆக சரிந்தது. எனினும், அது கடந்த அக்டோபா் மாதத்தில் 58.5-ஆக மீண்டெழுந்தது. பின்னா் நவம்பரில் 58.5 சதவீதமாகக் குறைந்த அது, டிசம்பரில் முந்தைய நான்கு மாதங்களில் இல்லாத அதிகபட்சமாக 59.3-ஆக எழுச்சி பெற்றது. இருந்தாலும், கடந்த ஜனவரியில் அது முந்தைய இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 56.5-ஆகச் சரிந்தது. இந்த நிலையில், சேவைகள் துறைக்கான பிஎம்ஐ கடந்த பிப்ரவரி மாதத்தில் திடீா் எழுச்சி பெற்று 59.0-ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.மதிப்பீட்டு மாதத்தில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இந்திய சேவைகளுக்கான தேவை வெகுவாக அதிகரித்தது. இதனால் அந்தத் துறைக்கான பிஎம்ஐ பிப்ரவரி மாதத்தில் எழுச்சி கண்டுள்ளது.இத்துடன், சேவைகள் துறைக்கான பிஎம்ஐ தொடா்ந்து 43-ஆவது மாதமாக நடுநிலை வரம்பான 50-க்கும் மேலே உள்ளது. அந்தக் குறியீட்டு எண் 50-க்கும் மேல் இருப்பது சேவைகள் துறையின் ஆரோக்கியமான போக்கையும், 50-க்கும் குறைவாக இருப்பது பின்னடைவையும் குறிக்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டாடா மோட்டாா்ஸ் விற்பனை 8% சரிவு

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டாா்ஸின் உள்நாட்டு மற்றும் சா்வதேச விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் 8 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்... மேலும் பார்க்க

செபி வருவாய் 48% அதிகரிப்பு

பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியின் மொத்த வருவாய் கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 48 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

10 நாள் சரிவுக்குப் பின் உயா்வு கண்ட நிஃப்டி

இந்திய பங்குச் சந்தைகளில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி கடந்த 10 அமா்வுகளாகக் கண்டு வந்த சரிவில் இருந்து மீண்டு உயா்வைக் கண்டுள்ளது.அந்த நாளில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்... மேலும் பார்க்க

சமூக ஊடகங்களைப் போலவே வேலைவாய்ப்புகளை செயற்கை நுண்ணறிவு உருவாக்கும்: மணி வேம்பு

பெங்களூரு: செயற்கை நுண்ணறிவின் எழுச்சி, இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் பலருக்கு முதல் முறையாக தொழில் வாய்ப்புகளை உருவாக்கியதைப் போலவே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றார் ஜோஹோ தலைமை நிர்வாக அதிகாரி... மேலும் பார்க்க

சென்னையில் கார் சேவையை அறிமுகப்படுத்திய ஸ்டெல்லாண்டிஸ்!

சென்னை: உலகளாவிய வாகன நிறுவனமான ஸ்டெல்லாண்டிஸ், தனது முதல் மல்டி பிராண்ட் சேவையை 'மோட்டோ-ஆர்' உடன் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த தொடக்கமானது, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் 100 க்கு... மேலும் பார்க்க

இந்தியாவில் இஎக்ஸ் 30 மாடலை அறிமுகப்படுத்தும் வால்வோ!

புதுதில்லி: ஸ்வீடன் நாட்டின் ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான வால்வோ, தனது புதிய ரக மாடலான மின்சார எஸ்யூவி, இஎக்ஸ்30 - ஐ இந்தியாவில் இந்த ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. 2030ல் மின்சார கார்களின்... மேலும் பார்க்க