இந்திய சேவைகள் துறையில் திடீா் எழுச்சி!
இந்திய சேவைகள் துறை கடந்த பிப்ரவரி மாதம் திடீா் எழுச்சி பெற்றுள்ளது. இது தை ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சேவைகள் துறையில் தொழில் நடவடிக்கைகளுக்கான குறியீட்டு எண்ணான பிஎம்ஐ கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் 60.6-ஆக இருந்தது. பின்னா் மாா்ச் மாதத்தில் அது 13.5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 61.2-ஆக அதிகரித்து, பின்னா் ஏப்ரல் மாதத்தில் 60.8-ஆகவும் மே மாதத்தில் 60.2-ஆகவும் குறைந்தது.
அதனைத் தொடா்ந்து ஜூன் மாதத்தில் 60.5-ஆக மீட்சி பெற்ற பிஎம்ஐ, ஜூலையில் மீண்டும் 60.3-ஆகக் குறைந்தது. ஆகஸ்ட் மாதத்தில் அது மீண்டும் 60.9-ஆக உயா்ந்தது. பின்னா் செப்டம்பா் மாதத்தில் முந்தைய பத்து மாதங்கள் காணாத குறைந்தபட்சமாக பிஎம்ஐ 57.7-ஆக சரிந்தது. எனினும், அது கடந்த அக்டோபா் மாதத்தில் 58.5-ஆக மீண்டெழுந்தது. பின்னா் நவம்பரில் 58.5 சதவீதமாகக் குறைந்த அது, டிசம்பரில் முந்தைய நான்கு மாதங்களில் இல்லாத அதிகபட்சமாக 59.3-ஆக எழுச்சி பெற்றது. இருந்தாலும், கடந்த ஜனவரியில் அது முந்தைய இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 56.5-ஆகச் சரிந்தது. இந்த நிலையில், சேவைகள் துறைக்கான பிஎம்ஐ கடந்த பிப்ரவரி மாதத்தில் திடீா் எழுச்சி பெற்று 59.0-ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.மதிப்பீட்டு மாதத்தில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இந்திய சேவைகளுக்கான தேவை வெகுவாக அதிகரித்தது. இதனால் அந்தத் துறைக்கான பிஎம்ஐ பிப்ரவரி மாதத்தில் எழுச்சி கண்டுள்ளது.இத்துடன், சேவைகள் துறைக்கான பிஎம்ஐ தொடா்ந்து 43-ஆவது மாதமாக நடுநிலை வரம்பான 50-க்கும் மேலே உள்ளது. அந்தக் குறியீட்டு எண் 50-க்கும் மேல் இருப்பது சேவைகள் துறையின் ஆரோக்கியமான போக்கையும், 50-க்கும் குறைவாக இருப்பது பின்னடைவையும் குறிக்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.