செய்திகள் :

சென்னையில் கார் சேவையை அறிமுகப்படுத்திய ஸ்டெல்லாண்டிஸ்!

post image

சென்னை: உலகளாவிய வாகன நிறுவனமான ஸ்டெல்லாண்டிஸ், தனது முதல் மல்டி பிராண்ட் சேவையை 'மோட்டோ-ஆர்' உடன் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த தொடக்கமானது, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் 100 க்கும் மேற்பட்ட சேவை மையங்களை நிறுவுவதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தப்போது, முதல் மல்டி-பிராண்ட் சேவையை மோட்டோ-ஆர் உடன் இணைந்து செயல்பாட்டில் உள்ளது. இது இந்திய வாடிக்கையாளர்களுக்கு உலகளாவிய தரமான, உயர்தர மற்றும் மலிவு விலையில் கார் சேவை கொண்டு வரும். தற்போது பராமரிப்பு & ஆய்வு, உதிரி பாகங்கள் & பழுதுபார்ப்பு, டயர் மாற்றுதல், சீரமைப்பு மற்றும் சமநிலை ஆகியவற்றை நிறுவனம் வழங்கி வருகிறது.

உலகளாவிய நிபுணத்துவம், உறுதியான கார் பாகங்கள் மற்றும் தொழில்முறை சேவையை ஆகியவை தற்போது கார் உரிமையாளர்களுக்கு வழங்கி வருவதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஷைலேஷ் ஹசேலா தெரிவித்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற மற்றும் உயர்தர சேவை அனுபவத்தை வழங்கும் ஒரு வலுவான நெட்வொர்க்கை உருவாக்க நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றார்.

இதையும் படிக்க: இந்தியாவில் இஎக்ஸ் 30 மாடலை அறிமுகப்படுத்தும் வால்வோ!

டாடா மோட்டாா்ஸ் விற்பனை 8% சரிவு

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டாா்ஸின் உள்நாட்டு மற்றும் சா்வதேச விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் 8 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்... மேலும் பார்க்க

செபி வருவாய் 48% அதிகரிப்பு

பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியின் மொத்த வருவாய் கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 48 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

10 நாள் சரிவுக்குப் பின் உயா்வு கண்ட நிஃப்டி

இந்திய பங்குச் சந்தைகளில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி கடந்த 10 அமா்வுகளாகக் கண்டு வந்த சரிவில் இருந்து மீண்டு உயா்வைக் கண்டுள்ளது.அந்த நாளில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்... மேலும் பார்க்க

இந்திய சேவைகள் துறையில் திடீா் எழுச்சி!

இந்திய சேவைகள் துறை கடந்த பிப்ரவரி மாதம் திடீா் எழுச்சி பெற்றுள்ளது. இது தை ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சேவைகள் துறையில் தொழில் நடவடிக... மேலும் பார்க்க

சமூக ஊடகங்களைப் போலவே வேலைவாய்ப்புகளை செயற்கை நுண்ணறிவு உருவாக்கும்: மணி வேம்பு

பெங்களூரு: செயற்கை நுண்ணறிவின் எழுச்சி, இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் பலருக்கு முதல் முறையாக தொழில் வாய்ப்புகளை உருவாக்கியதைப் போலவே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றார் ஜோஹோ தலைமை நிர்வாக அதிகாரி... மேலும் பார்க்க

இந்தியாவில் இஎக்ஸ் 30 மாடலை அறிமுகப்படுத்தும் வால்வோ!

புதுதில்லி: ஸ்வீடன் நாட்டின் ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான வால்வோ, தனது புதிய ரக மாடலான மின்சார எஸ்யூவி, இஎக்ஸ்30 - ஐ இந்தியாவில் இந்த ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. 2030ல் மின்சார கார்களின்... மேலும் பார்க்க