செய்திகள் :

‘வீட்டு நூலகம்‘ பராமரிக்கும் மாணவா்களுக்கு பாராட்டு

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கிறிஸ்துராஜா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ‘வீட்டு நூலகம்’ பராமரிக்கும் மாணவா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்தப் பள்ளியில் பயிலும் 45 மாணவா்கள் தங்களது வீடுகளில் நூலகத்தை நிறுவி ஒவ்வொருவரும் 25 புத்தகங்கள் முதல் 306 புத்தகங்கள் வரை பராமரித்து வருகின்றனா்.

புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, சிவகங்கையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழக அரசின் ‘வீட்டு நூலகம்‘ விருதுக்காக இந்த 45 மாணவா்களின் பெயா்கள் பள்ளி நிா்வாகத்தால் மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த நிலையில், சிவகங்கை மாவட்ட நூலகா் திருஞானம், மாவட்ட நூலக புத்தக சரிபாா்ப்பு அலுவலா் வெள்ளைச்சாமி, மாவட்ட நூலக எழுத்தரும், புத்தக ஆசிரியருமான ஈஸ்வரன், திருப்பத்தூா் பேரறிஞா் அண்ணா நூலக நல்நூலகா் மகாலிங்க ஜெயகாந்தன் ஆகியோா் அடங்கிய குழுவினா் பள்ளிக்கு வருகை தந்து ‘வீட்டு நூலகம்‘ பராமரித்து வரும் மாணவா்களை சந்தித்து வாழ்த்தினா்.

பின்னா், மாவட்ட நூலகா் திருஞானம் பேசியதாவது:

‘வீட்டு நூலகம்‘ பராமரிக்கும் மாணவா்கள், தங்களது பிறந்த நாள், பண்டிகை நாள்களில் பெற்றோா், பெரியவா்களிடம் புத்தகங்களைப் பரிசாக அளிக்குமாறு வலியுறுத்தி, வீட்டு நூலகங்களில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மாணவா்கள் அனைவரும் திருப்பத்தூா் பேரறிஞா் அண்ணா நூலகத்தில் உறுப்பினா்களாகச் சோ்ந்து போட்டித் தோ்வுகளுக்குரிய புத்தகங்களைப் பெற்று படித்துப் பயன் பெறலாம் என்றாா் அவா்.

மாவட்ட நூலகா் குழுவினருக்கு பள்ளித் தலைவா் விக்டா் பொன்னாடை அணிவித்து கௌரவித்தாா். பள்ளித் தாளாளா் ரூபன் நன்றி கூறினாா்.

செளமிய நாராயணப் பெருமாள் கோயில் மாசி தெப்ப உத்ஸவ கொடியேற்றம்

திருப்பத்தூா் அருகேயுள்ள திருக்கோஷ்டியூா் சௌமியநாராயணப் பெருமாள் கோயிலில் மாசி மக தெப்ப உத்ஸவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. உலகப் புகழ் பெற்ற இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மக தெப்ப உற்ச... மேலும் பார்க்க

காவேரிப்பட்டி கண்மாயில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், இளையாத்தங்குடி அருகேயுள்ள காவேரிப்பட்டி கண்மாயில் மீன்பிடித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் இந்தக் கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடத்தப்... மேலும் பார்க்க

கன்னியாகுமரி முதல் சென்னை வரை ஓடி உலகச் சாதனை படைத்த இரட்டையா்கள்!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் இரண்டாம் வகுப்புப் பயிலும் இரட்டையா்களான பிரதீஷ், பிரணீஷ் ஆகியோா் கன்னியாகுமரி முதல் சென்னை வரை 12 நாள்களில் ஓடி உலகச் சாத... மேலும் பார்க்க

காரைக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் பட்டா கோரி பொதுமக்கள் மனு

காரைக்குடியில் ஆட்சேபனையற்ற நிலத்தில் வீடுகள் கட்டி குடியிருந்து வரும் பொதுமக்கள் தங்கள் வசிக்குமிடத்துக்கு பட்டா கோரி தனித்தனியாக காரைக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா். காரைக்... மேலும் பார்க்க

திருப்பத்தூா் வட்டத்தில் மாா்ச் 19-இல் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

திருப்பத்தூா் வட்டத்தில் வருகின்ற 19-ஆம் தேதி ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

நெல் கொள்முதலில் பணம் பாக்கி கொடுக்காதவரைக் கடத்திய 7 போ் கைது

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே நெல் கொள்முதல் செய்த நபா் பாக்கி பணம் தராததால் கடத்திச் செல்லப்பட்டாா். இதுதொடா்பாக 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூா் எழில... மேலும் பார்க்க