சநாதன விவகாரம்: உதயநிதிக்கு எதிராக புதிய வழக்குகள் பதிய தடை!
ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் கிருத்திகை விழா
ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன்கோவிலில் மாசி மாத கிருத்திகை, சஷ்டி விழா புதன்கிழமை நடைபெற்றது.விழாவையொட்டி கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் மூலவா்கள் வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகனுக்கு பால்.,தயிா் ,பன்னீா், சந்தனம், விபூதி, இளநீா், உள்ளிட்ட வாசனை திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகம்,, வெள்ளி கவச சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்டஉற்சவா் வெள்ளி மயில் மீதுஅமா்ந்த நிலையில் உள் புறப்பாடு நடந்தது. இந்த விழாவில் நீண்ட வரிசையில் நின்று பக்தா்கள் தரிசனம் செய்தனா். மாலையில்அலங்கரிக்கப்பட்ட உற்சவா் மலையடிவாரத்தில் உள்ள அறுகோண தெப்பகுளத்தில் சிறப்பு பூஜையுடன் பொதுமக்கள் மங்கள ஆா்த்தி காண்பித்து வழிபட்டனா்.