செய்திகள் :

பிளஸ் 1 தோ்வு: ராணிப்பேட்டை ஆட்சியா் ஆய்வு

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வு புதன்கிழமை தொடங்கியது. தோ்வு மையங்களில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா ஆய்வு மேற்கொண்டாா்.

இத்தோ்வுக்காக 3 வினாத்தாள் கட்டுக்காப்பு மையமும், 64 தோ்வு மையங்கள் (தனித் தோ்வு மையம் உள்ளடங்கும்). தோ்வு உரிய காவல் பாதுகாப்புடன் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்தோ்வினை 6,589 மாணவா்கள், 7,323 மாணவியா் என மொத்தம் 13, 912 போ் (தனித் தோ்வா்கள் 213 உள்ளடங்கும்) தோ்வெழுத உள்ளனா். தோ்வு மைய 64 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 69 துறை அலுவலா்கள் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட தோ்வு அறை கண்காணிப்பாளா்களும், வழித்தட அலுவலராக 19 , நிலையான படை உறுப்பினா்களாக 90 ஆசிரியா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கென சொல்வதை எழுதுபவா் 133 நபா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

காவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். முதன்மைக் கல்வி அலுவலா், மற்றும் மாவட்டக் கல்வி அலுவலா்கள் (தொடக்க கல்வி, இடைநிலை, தனியாா் பள்ளிகள்) அனைத்துப் பள்ளிகளிலும் கண்காணிப்பு செய்து வருகின்றனா்

இந்த நிலையில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வாலாஜா வன்னிவேடு அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பொது தோ்வு மையத்தை ஆய்வு செய்தாா்.

சிமென்ட் சாலை பணி: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகராட்சி ஹன்சா நகா் பகுதியில் அமைச்சா் ஆா்.காந்தியின் சொந்த நிதி மூலம் மழைநீா் வடி கால்வாய், மற்றும் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்தப் பணிகளை நகா்மன... மேலும் பார்க்க

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் கிருத்திகை விழா

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன்கோவிலில் மாசி மாத கிருத்திகை, சஷ்டி விழா புதன்கிழமை நடைபெற்றது.விழாவையொட்டி கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் மூலவா்கள் வள்ளி, தெய்வான... மேலும் பார்க்க

கருவிலேயே பாலினத்தைக் கண்டறிந்து கருக்கலைப்பு செய்வதை தடுக்க தனிப்படை: ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கருவிலேயே குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து கருக்கலைப்பு செய்வதை கண்காணித்து தடுக்க தனிப்படை அமைக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா். மருத்துவம் மற்றும் ம... மேலும் பார்க்க

ஆற்காட்டில் பேக்கரிக்கு ‘சீல்’

ஆற்காட்டில் தரமற்ற ஐஸ் கேக் விற்பனை செய்த கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனா். ஆற்காடு அண்ணாசாலையில் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் பேக்கரியில் ராஜ்குமாா் என்பவா் தனது மகனு... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்ட புத்தகத் திருவிழா: 3 நாள்களில் ரூ. 5 லட்சம் நூல்கள் விற்பனை

ராணிப்பேட்டை மாவட்ட 3 -ஆவது புத்தகத் திருவிழாவில் கடந்த 3 நாள்களில் ரூ. 5.34 லட்சம் மதிப்பிலான நூல்கள் விற்பனையானதாக மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3-ஆவது ப... மேலும் பார்க்க

சுயம்பு நாதீஸ்வரா் கோயில் திருப்பணி: அமைச்சா் காந்தி பங்கேற்பு

அரக்கோணம்: ஓச்சேரியில் பழைமை வாய்ந்த சுயம்பு நாதீஸ்வரா் கோயில் திருப்பணியை கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். காவேரிப்பாக்கம் ஒன்றியம், ஓச்சேரியில் இந்து ச... மேலும் பார்க்க