செய்திகள் :

கொல்லப்பட்ட இந்தியரின் உடலை தாயகம் கொண்டு வரும் செலவை மத்திய அரசு ஏற்க வேண்டும்: காங்கிரஸ் தலைவர்

post image

ஜோர்டான் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியரின் உடலை தாயகம் கொண்டு வருவதற்கான செலவை மத்திய அரசு ஏற்க வேண்டும் என கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருவணந்தப்புரத்தின் தும்பா பகுதியைச் சேர்ந்த தாமஸ் கேப்ரியல் பெரேரா எனும் நபர் தனது உறவினரான எடிசன் என்பவர் உள்பட 4 பேர் கொண்ட குழுவுடன் இணைந்து கடந்த பிப்.10 அன்று ஜோர்டான் நாட்டிலிருந்து இஸ்ரேலுக்கு எல்லையைக் கடக்க முயன்றனர். அப்போது, ஜோர்டான் ராணுவத்தினர் அவர்களை பிடித்த நிலையில் அவர்களிடமிருந்து தாமஸ் கேப்ரியல் மற்றும் எடிசன் ஆகிய இருவரும் தப்பி ஓட முயற்சித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கேப்ரியலின் தலையில் குண்டு பாய்ந்து அவர் பலியானார். மேலும், எடிசனின் காலில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்த நிலையில் அவருக்கு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் இந்தியாவிற்கு திரும்பி அனுப்பப்பட்டார்.

இதையும் படிக்க:சத்தீஸ்கரில் 13 மாதங்களில் இவ்வளவு தொழிற்சாலை விபத்துகளா?

கடந்த மார்ச்.1 அன்று கேப்ரியலின் மரணத்தை உறுதி செய்து அவரது குடும்பத்தினருக்கு இந்தியத் தூதரகம் சார்பில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அவரது உடலைத் தாயகம் கொண்டு வருவதற்கான செலவை அவரது குடும்பத்தினர்தான் வழங்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவரது உடலை விரைந்து இந்தியாவிற்கு கொண்டு வரவேண்டும் எனவும் அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜோர்டானிலுள்ள இந்தியத் தூதரகத்திற்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சதீஸன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஜோர்டான் நாட்டிற்கு சட்டபூர்வமான 3 மாத விசாவில் சென்ற கேப்ரியல் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், துயரத்தில் உள்ள அவரது குடும்பத்தினரால் அவரது உடலை தாயகம் கொண்டு வரும் செலவுகள் ஏற்க இயலாது எனவே அதற்கான செலவை மத்திய அரசே ஏற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சட்டக் கல்லூரி காவலாளியைக் கடத்திய பாகிஸ்தான் பாதுகாப்புப் படை?

பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தின் சட்டக் கல்லூரியின் காவலாளியை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் கடத்தி சென்றதாகக் கூறப்படுகிறது. பலோசிஸ்தானின் சங்காபாத் பகுதியைச் சேர்ந்தவர் சயீத் பலோச், இவர் பல ஆண்... மேலும் பார்க்க

கோல்வாக்கரின் புத்தகம் சிவாஜியை இழிப்படுத்தியதாகக் கூறும் சமூக ஊடகக் கணக்குகளின் மீது புகார்!

மகாராஷ்டிரத்தில் கோல்வாக்கரின் புத்தகம் சத்ரபதி சிவாஜியை இழிவுப் படுத்தியதாகக் கூறும் சமூக ஊடகக் கணக்குகளின் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாரளிக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்ப... மேலும் பார்க்க

51 புதிய வாகனங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்!

தமிழகத்தில் வருவாய்த் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.4.58 கோடி மதிப்பீட்டிலான 51 புதிய வாகனங்களை பயன்பாட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.வருவாய்த்துறை, மாநிலத்தின் நிர... மேலும் பார்க்க

பயிற்சியில் தவறுதலாக மக்கள் மீது குண்டுகள் வீசிய போர் விமானங்கள்! 15 பேர் படுகாயம்!

தென் கொரியா நாட்டில் பயிற்சியில் ஈடுபட்ட போர் விமானங்கள் தவறுதலாக மக்கள் குடியிருக்கும் பகுதியில் குண்டுகள் வீசியதில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். வட கொரியா நாட்டுடனான எல்லையில் போசியோன் நகரத்தின் அரு... மேலும் பார்க்க

6 பேருக்கு கலைச் செம்மல் விருதுகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் சிறப்பிப்பு

சென்னை: ஓவியம், சிற்பக் கலையில் சாதனை படைத்த ஆறு பேருக்கு கலைச் செம்மல் விருதுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மரபுவழி ... மேலும் பார்க்க

கலைஞர் எழுதுகோல் விருது: நக்கீரன் கோபால், சுகிதா சாரங்கராஜுக்கு வழங்கினார் முதல்வர்!

சென்னை: 2023-ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதுகளை நக்கீரன் இரா.கோபால் மற்றும் சுகிதா சாரங்கராஜ் ஆகிய இருவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிச் சிறப்பித்தார்.இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்க... மேலும் பார்க்க