செய்திகள் :

6 பேருக்கு கலைச் செம்மல் விருதுகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் சிறப்பிப்பு

post image

சென்னை: ஓவியம், சிற்பக் கலையில் சாதனை படைத்த ஆறு பேருக்கு கலைச் செம்மல் விருதுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மரபுவழி ஓவியம், நவீன பாணி ஓவியம் மற்றும் சிற்பக் கலைகளில் திறமைமிக்க கலைஞர்களுக்கு கலைச்செம்மல் விருது வழங்கி ஊக்குவித்து வருகிறது.

இந்த விருதுடன், விருதாளர்களுக்கு செப்புப் பட்டயம், ரூ.1 லட்சம் விருதுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை வழங்கி கௌரவிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் 6 புகழ்பெற்ற கலைஞர்களுக்கு இநத விருதுகள் வழங்கப்படுகின்றன.

கலைஞர் எழுதுகோல் விருது: நக்கீரன் கோபால், சுகிதா சாரங்கராஜுக்கு வழங்கினார் முதல்வர்!

அதன்படி, தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், 2024-2025 ஆம் ஆண்டிற்கான கலைச்செம்மல் விருதிற்கு மரபுவழி ஓவியப் பிரிவில் ஆ.மணிவேலு, மரபுவழி சிற்ப பிரிவில் வே.பாலச்சந்தர் மற்றும் கோ.கன்னியப்பன், நவீனபாணி ஓவியப் பிரிவில் கி.முரளிதரன் மற்றும் அ.செல்வராஜ், நவீனபாணி சிற்ப பிரிவில் நா.ராகவன் ஆகிய 6 கலைஞர்கள் விருதுகளையும், விருதிற்கான செப்புப் பட்டயம், ரூ.1 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி முதல்வர் ஸ்டாலின் சிறப்பித்தார்.

இந்த நிகழ்வின் போது, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் க.மணிவாசன் மற்றும் கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் கவிதா ராமு ஆகியோர் உடனிருந்தனர்.

சட்டக் கல்லூரி காவலாளியைக் கடத்திய பாகிஸ்தான் பாதுகாப்புப் படை?

பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தின் சட்டக் கல்லூரியின் காவலாளியை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் கடத்தி சென்றதாகக் கூறப்படுகிறது. பலோசிஸ்தானின் சங்காபாத் பகுதியைச் சேர்ந்தவர் சயீத் பலோச், இவர் பல ஆண்... மேலும் பார்க்க

கோல்வாக்கரின் புத்தகம் சிவாஜியை இழிப்படுத்தியதாகக் கூறும் சமூக ஊடகக் கணக்குகளின் மீது புகார்!

மகாராஷ்டிரத்தில் கோல்வாக்கரின் புத்தகம் சத்ரபதி சிவாஜியை இழிவுப் படுத்தியதாகக் கூறும் சமூக ஊடகக் கணக்குகளின் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாரளிக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்ப... மேலும் பார்க்க

கொல்லப்பட்ட இந்தியரின் உடலை தாயகம் கொண்டு வரும் செலவை மத்திய அரசு ஏற்க வேண்டும்: காங்கிரஸ் தலைவர்

ஜோர்டான் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியரின் உடலை தாயகம் கொண்டு வருவதற்கான செலவை மத்திய அரசு ஏற்க வேண்டும் என கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். திருவணந்தப்புரத்தின் தும்... மேலும் பார்க்க

51 புதிய வாகனங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்!

தமிழகத்தில் வருவாய்த் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.4.58 கோடி மதிப்பீட்டிலான 51 புதிய வாகனங்களை பயன்பாட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.வருவாய்த்துறை, மாநிலத்தின் நிர... மேலும் பார்க்க

பயிற்சியில் தவறுதலாக மக்கள் மீது குண்டுகள் வீசிய போர் விமானங்கள்! 15 பேர் படுகாயம்!

தென் கொரியா நாட்டில் பயிற்சியில் ஈடுபட்ட போர் விமானங்கள் தவறுதலாக மக்கள் குடியிருக்கும் பகுதியில் குண்டுகள் வீசியதில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். வட கொரியா நாட்டுடனான எல்லையில் போசியோன் நகரத்தின் அரு... மேலும் பார்க்க

கலைஞர் எழுதுகோல் விருது: நக்கீரன் கோபால், சுகிதா சாரங்கராஜுக்கு வழங்கினார் முதல்வர்!

சென்னை: 2023-ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதுகளை நக்கீரன் இரா.கோபால் மற்றும் சுகிதா சாரங்கராஜ் ஆகிய இருவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிச் சிறப்பித்தார்.இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்க... மேலும் பார்க்க