செய்திகள் :

Jaishankar : லண்டன் பயணத்தில் பாதுகாப்பு அத்துமீறல்; காலிஸ்தானி குழுக்களுக்கு இந்தியா கண்டனம்!

post image

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இங்கிலாந்துக்கு மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்பு அத்துமீறலுக்கு, இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இணையத்தில் வைரலாகும் வீடியோவில், ஜெய்சங்கர் காரில் அமர்ந்திருக்கும்போது, காலிஸ்தானி ஆதரவாளர்கள் கொடியுடன் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருக்கின்றனர். அப்போது மூவர்ணக் கொடியுடன் ஒருவர் காவலர்களைக் கடந்து கார் அருகே வர, அவரைக் காவலர்கள் வலுக்கட்டாயமாகப் பிடிக்கும் நிலை வந்தது.

ஜனநாயக சுதந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது!

இந்தச் சம்பவம் குறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் தளத்தில், "வெளியுறவுத்துறை அமைச்சர் வருகையின்போது பாதுகாப்பு அத்துமீறல் நடைபெற்ற வீடியோவை நாங்கள் பார்த்தோம். சிறிய பிரிவினைவாத, தீவிரவாதக் குழுவின் தூண்டுதல்களை நாங்கள் கண்டிக்கிறோம்." எனக் கூறியுள்ளார்.

ஜெய்சங்கர் மற்றும் கெய்ர் ஸ்டார்மர்

மேலும், " இது போன்ற செயல்பாடுகளால் ஜனநாயக சுதந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்காக வருந்துகிறோம். இது போன்ற சம்பவங்களில் அந்த நாடு (UK) அதன் ராஜாந்திர கடைமைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறோம்." என்றும் எழுதியுள்ளார்.

முன்னதாக கடந்த ஜனவரி மாதம், தீவிர காலிஸ்தான் ஆதரவு குழுவினர் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் (Indian High Commission in London) முன்பு போராட்டம் நடத்தியது, 2023ம் ஆண்டு இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Jaishankar இங்கிலாந்து பயணம்

காலிஸ்தானி ஆதரவாளர்கள் போராட்டத்துக்கு நடுவில் தனது பயணத்திட்டத்தை சரியாக நிறைவேற்றி வருகிறார் அமைச்சர் ஜெய்சங்கர். இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், வெளியுறவு செயளாலர் டேவிட் லம்மி மற்றும் மூத்த தலைவர்களைச் சந்தித்துள்ளார்.

கடந்த செவ்வாய் அன்று உள்துறை செயலாளர் யெவெட் கூப்பரை சந்தித்து மனித கடத்தல் மற்றும் தீவிரவாதத்துக்கு எதிராக இரண்டு நாடுகள் இணைந்து நடவடிக்கை மேற்கொள்வது பற்றி உரையாடியுள்ளார்.

`அறிஞர் அண்ணாவிடமிருந்த நேர்மை மு.க.ஸ்டாலினிடம் இல்லை...' - சொல்கிறார் இராம.ஸ்ரீநிவாசன்

புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் இராம ஸ்ரீநிவாசன் தலைமையில் மதுரையில் கையெழுத்து இயக்கம் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இராம ஸ்ரீநிவாசன், "புதிய கல்விக் கொள்கை மூலமா... மேலும் பார்க்க

தெலங்கானா: மத அடையாளங்களை அகற்றக் கூறி மாணவர்களை தாக்கிய பள்ளி முதல்வர் - கொதித்தெழுந்த பெற்றோர்கள்!

தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள கோண்டோர் ஷைன் பள்ளியில் நடந்த ஒரு சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியின் முதல்வர் லட்சுமய்யா, மாணவர்கள் நெற்றியில் பொட்டு வைத்திருந்ததைக் கண்டி... மேலும் பார்க்க

Ooty: இந்த சம்மருக்கு ஊட்டி போறீங்களா? சிறப்பு மலை ரயில்கள் அறிவிப்பு; எந்தெந்த நாட்களில் தெரியுமா?

சுவிட்சர்லாந்து தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட நீராவி ரயில் என்ஜின்கள் நீலகிரியில் நூற்றாண்டுகளைக் கடந்தும் இயங்கி வருகின்றன. யுனெஸ்கோவின் உலக பாரம்பர்ய அந்தஸ்தைப் பெற்ற இந்த மலை ரயிலில் பயணிக்க உலக... மேலும் பார்க்க

போரில் அழிக்கப்பட்ட காஸா நகரம்: இடிபாடுகளுக்கு நடுவே இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

காஸா காஸா காஸா காஸா காஸா காஸா காஸா காஸா காஸா காஸா காஸா காஸா காஸா காஸா காஸா காஸா காஸா மேலும் பார்க்க

TVK: ஒரு நாள் நோன்பு இருக்கும் விஜய்; சென்னையில் பரபரக்கும் தவெக - இஃப்தார் நிகழ்ச்சி அப்டேட்ஸ்

தவெக சார்பில் இராயப்பேட்டை YMCA மைதானத்தில் இஃப்தார் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். நாளை மாலை நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சிக்காக ஒரு நாள் நோன்பு இருக்கும் முடிவில் விஜய் இருக்கி... மேலும் பார்க்க

ஒரே நாளில் திமுக அமைச்சர், எம்.பி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை... பின்னணி என்ன?

தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று, தி.மு.க அமைச்சரின் நண்பர்கள் வீடுகளிலும், தி.மு.க எம்.பி-யின் நிறுவன அலுவலகத்திலும் சோதனையில் ஈடுபட்டு வருவது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியிருக்கிறத... மேலும் பார்க்க