செய்திகள் :

உ.பி இளம்பெண் கொலை: மொட்டைபோட்டு கங்கையில் நீராடல்; கேரளாவுக்கு தப்ப முயன்றபோது சிக்கிய காதலன்!

post image

உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்பூரில் மருத்துவமனை ஒன்றிற்கு அருகில் இருந்த புதரில் டிராலி பேக் ஒன்று கிடந்தது. இது குறித்து போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். போலீஸார் அந்த பேக்கை பறிமுதல் செய்து திறந்து பார்த்தபோது, உள்ளே இளம் பெண் ஒருவரின் உடல் இருந்தது. உடனே அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது வாலிபர் ஒருவர் ஆட்டோவில் வந்து பேக்கை கொண்டு வந்து புதரில் போட்டுச் சென்றது தெரியவந்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் அப்பெண்ணின் பெயர் அனன்யா என்று தெரியவந்தது. அவர் லக்னோவைச் சேர்ந்தவர் என்றும், அவர் அங்குள்ள விஷால் என்பவரை காதலித்து வந்ததும் தெரிய வந்தது. பெற்றோர் கட்டாயப்படுத்தி அனன்யாவை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனால் சில மாதங்களில் தனது கணவனிடமிருந்து பிரிந்து லக்னோவிற்கு வந்து வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார். அதோடு அங்குள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை செய்து வந்தார்.

crime

வீட்டிற்கு அவரது காதலன் விஷால் அடிக்கடி வந்து சென்றார். வழக்கம்போல் அனன்யாவை விஷால் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தார். இருவரும் வீட்டில் சந்தித்தபோது அவர்களுக்குள் ஏதோ ஒரு முக்கிய பிரச்னையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அனன்யாவை விஷால் சப்பாத்தி சுடும் பாத்திரத்தால் ஓங்கி அடித்துக் கொலைசெய்தார். பின்னர் அனன்யாவின் உடலை டிராலி பேக்கில் அடைத்து ஆட்டோவில் எடுத்துச் சென்று அருகில் உள்ள ஜான்பூரில் போட்டது தெரியவந்தது. விஷால் ஜான்பூரில் உடலை போட்டுவிட்டு மொட்டை போட்டுக்கொண்டு கங்கையில் நீராடிவிட்டு கேரளாவிற்கு தப்பிச்செல்ல திட்டமிட்டு இருந்தார். அதற்குள் அவரை போலீஸார் ரயில் நிலையத்தில் மடக்கிப் பிடித்து கைதுசெய்தனர். அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை: மனைவியை சுட்டுக் கொன்று, தற்கொலை செய்த கணவர் - பின்னணி என்ன?

கோவை அருகே மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று, கணவரும் சுட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள பட்டணம்புதூர் என்கிற பகுதியில் கிருஷ்ணகுமார் - சங... மேலும் பார்க்க

புல்லட் திருட்டில் ஸ்பெஷலிஸ்ட்; 9 புல்லட்கள் பறிமுதல்; 2 திருடர்கள் சிக்கியது எப்படி?

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் டூவிலர் திருட்டு அதிகமாக நடப்பதாகத் தொடர்ச்சியான புகார்கள் வரத் தொடங்கின. இதனால் மாவட்ட எஸ்.பி பிரதீப் உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸார் டூவிலர் திருட்டு வ... மேலும் பார்க்க

`549 கிராம் தங்கம்; 1 கிலோ கஞ்சா!’ - திருச்சி விமான நிலையத்தில் தொடர் கதையாகும் கடத்தல் சம்பவம்!

பேங்காக்கிலிருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது, சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த ஒரு பெண் பயணியை... மேலும் பார்க்க

சிறுமலை: வெடிமருந்துடன் ஆண் சடலம் மீட்கப்பட்ட விவகாரம்; துப்பு துலக்கிய போலீஸ்!

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை 17 ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதி அருகே புதருக்குள் ஒரு ஆண் சடலம் கிடந்தது. போலீஸார், வனத்துறையினர் விசாரிக்க சென்றபோது அருகே கிடந்த பேட்டரி, ஒயர்கள், வெடி மருந்து கிடந்துள்... மேலும் பார்க்க

Haryana: 'நஷ்டமான தொழில்... காப்பீட்டுத் தொகையைப் பெறக் கொலை' - சினிமா பாணி சம்பவம்; என்ன நடந்தது?

ஹரியானா மாநிலம் ஹிசாரைச் சேர்ந்தவர் ராம்மெஹர். கொரோனா பேரிடர் காலத்திற்கு முன்பு, தொழிற்சாலை நடத்தி வந்த இவர், லாக் டவுனின் போது இவரது தொழிற்சாலை பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. அதனால், அவரது கடன் அ... மேலும் பார்க்க

அம்பத்தூர்: பேட்மிட்டன் பயிற்சியாளர் கொலை வழக்கில் மூவர் சரண்; விசாரணையில் வெளியான பகீர் பின்னணி

அம்பத்தூர் டீச்சர் காலனியைச் சேர்ந்தவர் தினேஷ்பாபு. பேட்மிட்டன் பயிற்சியாளரான இவர், தந்தையின் கட்டிட ஒப்பந்த வேலைகளையும் கவனித்து வந்தார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தினேஷ்பாபு தனியாக... மேலும் பார்க்க