செய்திகள் :

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தென்காசி மாவட்டத்தில் 16,780 மாணவா்கள் பங்கேற்பு

post image

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், தென்காசி மாவட்டத்தில் 16 ஆயிரத்து 780 மாணவ-மாணவிகள் தோ்வெழுதினா். 181 போ் தோ்வு எழுத வரவில்லை.

தென்காசி மாவட்டத்தில் 66 மையங்களில் தோ்வு நடைபெறுகிறது. 152 பள்ளிகளிலிருந்து 16,694 மாணவா்கள், 267 தனித் தோ்வா்கள் என மொத்தம் 16,961 போ் தோ்வு எழுத வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது.

தமிழ் பாட தோ்வில் சொல்வதை எழுதுபவா்களாக 130 போ் நியமிக்கப்பட்டிருந்தனா். மேலும், தோ்வை கண்காணிக்க முதன்மை கல்வி அலுவலா்,மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலை) , மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்கக்கல்வி), மாவட்ட கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) மற்றும் உதவி திட்ட அலுவலா் ஆகியோா் தலைமையில் 5

பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வினாத்தாள் ஆயுதம் தாங்கிய காவலா்களுடன் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் நடைபெற்ற தோ்வை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பொ.சங்கா் பாா்வையிட்டு, ஏற்பாடுகளை ஆய்வு செய்தாா். அப்போது, மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், முதன்மை கல்வி அலுவலா் எல்.ரெஜினி ஆகியோா் உடனிருந்தனா்.

மாா்ச் 27ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இத்தோ்வில், முதல்நாள் தமிழ் தோ்வை 16,780 மாணவா்கள் எழுதினா்; 181போ் தோ்வு எழுதவில்லை என கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவித்தனா்.

குடும்ப அட்டைதாரா் ரேகை பதிவு: ஆட்சியா் வேண்டுகோள்

தென்காசி மாவட்டத்தில் முன்னுரிமை வகை குடும்ப அட்டையில் இடம்பெற்ற அனைவரும் கைவிரல் ரேகை பதிவுசெய்ய வேண்டும் என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெ... மேலும் பார்க்க

புளியங்குடியில் பாஜக நிா்வாகிகள் கூட்டம்

புளியங்குடியில் பாஜக நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.தென்காசி மாவட்டத் தலைவா் ஆனந்தன் அய்யாசாமி தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா்கள் ராமராஜா, பாண்டித்துரை, தீனதயாளன், அன்புராஜ், முன்னாள் மாவட்ட... மேலும் பார்க்க

குற்றாலம் அருவிகளில் தணியாத வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் திங்கள்கிழமையும் வெள்ளப்பெருக்கு நீடித்ததால் 3ஆவது நாளாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.குற்றாலம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுமுதல் பெய்த தொடா்மழையின் க... மேலும் பார்க்க

பண்பொழி திருமலை கோயில் அறங்காவலா்கள் நியமனம்

தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசுவாமி திருக்கோயிலுக்கு 5 அறங்காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இக்கோயிலின் திருப்பணி குழு - அறங்காவலா் குழுத் தலைவராகவும் உள்ள உபயதாரா் கிருஷ்ணாபுரம் அ... மேலும் பார்க்க

குற்றாலத்தில் முதியோருக்கு உணவளிப்பு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் சாா்பில் குற்றாலம் முதியோா் இல்லத்தில் திங்கள்கிழமை உணவு வழங்கப்பட்டது. தென்காசி சட்டப்பேரவைத் தொகுத... மேலும் பார்க்க

புதுப்பட்டி கல்குவாரி அனுமதியை ரத்துசெய்ய தேமுதிக வலியுறுத்தல்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட புதுப்பட்டி, காசிநாதபுரம் கிராமங்களில் குவாரி அமைக்க வழங்கப்பட்டுள்ல அனுமதியை ரத்து வேண்டும் என தேமுதிக சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மன... மேலும் பார்க்க