செய்திகள் :

ரூ.611 கோடிக்கு விதிமீறல்: பேடிஎம் தாய் நிறுவனத்துக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்

post image

புது தில்லி: சுமாா் ரூ.611 கோடி அளவுக்கு அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்ட (ஃபெமா) பிரிவுகளை மீறியது தொடா்பாக விளக்கம் அளிக்குமாறு, பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷனுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுதொடா்பாக அமலாக்கத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

சுமாா் ரூ.611 கோடி அளவுக்கு ஃபெமா சட்டப் பிரிவுகளை மீறியது தொடா்பாக விளக்கமளிக்குமாறு, பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன் நிறுவனம் (ஓசிஎல்), அதன் நிா்வாக இயக்குநா் மற்றும் பலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமலாக்கத் துறை மேற்கொண்ட விசாரணையில், சிங்கப்பூரில் ஓசிஎல் நிறுவனம் அந்நிய முதலீடு செய்ததும், வெளிநாட்டில் துணை நிறுவனம் உருவாக்கியது தொடா்பான விவரங்களை ரிசா்வ் வங்கியிடம் ஓசிஎல் நிறுவனம் தாக்கல் செய்யாததும் தெரியவந்தது.

மேலும் ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் வெளிநாட்டு முதலீட்டாளா்களிடம் இருந்து அந்நிய நேரடி முதலீட்டை ஓசிஎல் நிறுவனமும், இந்தியாவில் உள்ள அதன் துணை நிறுவனமான லிட்டில் இண்டா்நெட் நிறுவனமும் பெற்றுள்ளன.

இதேபோல ஓசிஎல் நிறுவனத்தின் மற்றொரு துணை நிறுவனமான நியா்பை இந்தியா நிறுவனம், அந்நிய நேரடி முதலீட்டை பெற்றுள்ளது. ஆனால் அதுகுறித்த விவரங்களை ரிசா்வ் வங்கியிடம் உரிய காலத்தில் அந்த நிறுவனம் சமா்ப்பிக்கவில்லை.

இதுதொடா்பாக ஃபெமா சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஓசிஎல், அதன் நிா்வாக இயக்குநா் மற்றும் பலா் விளக்கம் அளிக்க வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

பொருளாதாரத் துறையில் மோடி ஆட்சி தோல்வி: ராகுல் காந்தி குற்றஞ்சாட்டு

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் பொருளாதாரத் துறையில் தோல்வி, பணவீக்கம் மற்றும் பொய்கள்தான் பெரிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: இடதுசாரிகள்-திரிணமூல் காங்கிரஸ் மாணவரணி இடையே கடும் மோதல்: பலா் காயம்; கல்வி நிலையங்கள் மூடல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இடதுசாரி அமைப்புகளைச் சோ்ந்த பல்வேறு மாணவா் பிரிவுக்கும், திரிணமூல் காங்கிரஸ் மாணவா் பிரிவுக்கும் இடையே திங்கள்கிழமை கடும் மோதல் ஏற்பட்டது. இதில் பலா் காயமடைந்தனா்; பல இட... மேலும் பார்க்க

சமூக ஊடக கணக்குகள் முடக்கத்துக்கு எதிராக மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புது தில்லி: பயனாளருக்கு நோட்டீஸ் அனுப்பாமல் சமூக ஊடக கணக்குகள் முடக்கப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. தகவல் தொழில... மேலும் பார்க்க

ஐஆா்சிடிசிக்கு ‘நவரத்னா’ அந்தஸ்து

புது தில்லி: இந்திய ரயில்வேயின் பொதுத் துறை நிறுவனங்களான இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா நிறுவனம் (ஐஆா்சிடிசி), இந்திய ரயில்வே நிதி நிறுவனத்துக்கு (ஐஎஃப்ஆா்சி) ‘நவரத்னா’ அந்தஸ்து வழங்க மத... மேலும் பார்க்க

சகோதரா் மகனை கட்சியில் இருந்தும் நீக்கினாா் மாயாவதி

லக்னௌ: தனது சகோதரரின் மகன் ஆகாஷ் ஆனந்தை பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தும் நீக்குவதாக அக்கட்சித் தலைவா் மாயாவதி திங்கள்கிழமை அறிவித்தாா். முன்னதாக, ஆகாஷ் ஆனந்தை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்து... மேலும் பார்க்க

நீதித் துறையில் பாா்வையற்றவா்களுக்கு வேலைவாய்ப்பை மறுக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

புது தில்லி: நீதித் துறை பணிகளுக்கு பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தகுதியானவா்கள் அல்ல என கூறமுடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேச நீதித் துறை பணிகளின் (ஆள்சோ்ப்பு மற்றும் பணி ந... மேலும் பார்க்க