செய்திகள் :

பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடக்கம்

post image

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு திங்கள்கிழமை தொடங்கியது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில், முதல் நாள் நடைபெற்ற மொழிப்பாடத் தேர்வை 11,430 பேர் எழுதவில்லை.

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தின் கீழ் பிளஸ் 2 பொதுத் தேர்வை நிகழ் கல்வியாண்டு 3,316 தேர்வு மையங்களில், 4.24 லட்சம் மாணவிகள் உள்பட 8 லட்சத்து 21,057 மாணவர்கள் எழுதுகின்றனர். இவர்களில் 18,344 பேர் தனித்தேர்வர்கள், 145 பேர் சிறைவாசிகள்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. தேர்வு காலை 10 மணிக்குத் தொடங்கி பகல் 1.15 மணி வரை நடைபெற்றது. தேர்வர்கள் 9.15 மணிக்கு முன்னதாக தேர்வு மையத்துக்குள் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி மாணவ, மாணவிகள் குறித்த நேரத்துக்குள் தேர்வு மையங்களுக்கு வந்து தேர்வெழுதினர்.

நிகழ் கல்வியாண்டில் தேர்வெழுத விண்ணப்பித்தவர்களில் 11,430 பேர் தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடங்களுக்கான தேர்வை எழுதவில்லை என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது.

கல்வித் துறை அமைச்சர் ஆய்வு: நாகப்பட்டினத்தில் உள்ள நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதவிருந்த மாணவர்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் திங்கள்கிழமை சந்தித்து அவர்களை ஊக்கப்படுத்தினார். மேலும், அச்சமின்றி தேர்வெழுதுமாறு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் சந்திரமோகன் ஆய்வு செய்தார்.

"தமிழ் தேர்வு எளிதாக இல்லை'

பொதுத்தேர்வில் முதல் தேர்வாக தமிழ் பாடத் தேர்வு நடைபெற்றது. இது குறித்து தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் கூறுகையில், அகமதிப்பீடு நீங்கலாக 90 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெற்றிருந்தன. அதில் 14 ஒரு மதிப்பெண் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்ட வினாக்கள் பாடப்பகுதிக்கு உள்ளிருந்து இடம்பெற்றிருந்ததால் பதிலளிப்பது சற்று சிரமமாக இருந்தது. இதேபோன்று சிறுவினா, நெடுவினா பகுதிகளிலும் சில கேள்விகள் நன்கு யோசித்து எழுதும் வகையில்தான் கேட்கப்பட்டிருந்தன. அதேவேளையில் மனப்பாடப்பகுதி எளிதாக இருந்தது என தெரிவித்தனர்.

முழு மதிப்பெண் பெறுவது கடினம்...: இது குறித்து தமிழாசிரியர்கள் கூறுகையில், இந்த வினாத்தாள் முற்றிலும் எளிதானவை என கூறி விட முடியாது. நன்கு படிக்கும் மாணவர்கள் 85 முதல் 90 மதிப்பெண்களுக்கும் மேல் பெறலாம். முழு மதிப்பெண் பெறுவது என்பது மிகவும் கடினம். இருப்பினும் சராசரி மாணவர்கள் 60 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், மெல்லக் கற்கும் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதிலும் எந்த சிரமமும் இருக்காது. கடந்த ஐந்தாண்டுகள் நடைபெற்ற பொதுத்தேர்வுகளிலிருந்து குறிப்பிடத்தக்க வினாக்கள் இடம்பெற்றிருந்தன என்றனர்.

சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவிகள்.

தொடர் சிகிச்சையில் தயாளு அம்மாள்! மு.க. அழகிரி வருகை!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவமனைக்கு நேரில் வந்து மு.க.அழகிரி நலம்விசாரித்தார்.வயது முதிா்வு காரணமாக சென்னை கோபாலபுரத்த... மேலும் பார்க்க

தங்கம் விலை ரூ. 560 உயர்வு! இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 64,080-க்கு விற்பனையாகிறது.தங்கத்தின் விலை சனிக்கிழமை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.7,940-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.63,520-க்... மேலும் பார்க்க

மீனவர்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

இலங்கை கடற்படை நடவடிக்கையால் பாதிக்கபட்டுள்ள மீனவர்களுக்கும் அவர்தம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுவரும் நிவாரணத் தொகையை உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் பார்க்க

திருச்செந்தூா் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் அவதார நாள் விழா!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 193வது அவதார நாள் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இவ்விழாவை முன்... மேலும் பார்க்க

சென்னை: தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கம்!

சென்னை : தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் வரை இயக்கப்படும் என்கிற நடைமுறை இன்றிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. மேலும் பார்க்க

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்

நாகப்பட்டினம்: "கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை இலங்கை அனுமதிக்கும் வகையில், புதியதொரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.... மேலும் பார்க்க