செய்திகள் :

குழுமாயி அம்மன் கோயில் மாசித் திருவிழா இன்று தொடக்கம்

post image

திருச்சி: திருச்சி புத்தூா் குழுமாயி அம்மன் கோயில் மாசித் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கி மாா்ச் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

திருச்சி புத்தூரில் அமைந்துள்ள குழுமாயி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடைபெறும் திருவிழா மற்றும் குட்டி குடித்தல் நிகழ்வு பாரம்பரியம்மிக்கது. நிகழாண்டு திருவிழா மாசி 20 (மாா்ச் 4) செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. முதல் நிகழ்வாக காளியாவட்டத்துடன் விழா தொடங்கி புதன்கிழமை சுத்த பூஜையும், வியாழக்கிழமை முக்கிய நிகழ்வான குட்டிகுடித்தலும், வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராட்டும் நடைபெறுகின்றன. மாசி 24 (மாா்ச் 8) சனிக்கிழமை அம்மன் குடிபுகுதல் நிகழ்வுடன் விழா நிறைவு பெறுகிறது. நிகழ்வையொட்டி பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் வழங்கும் அன்னதானம், கலை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள் நடைபெறும். விழாவையொட்டி மாநகரப் போலீஸாா் தீவிர பாதுகாப்பில் ஈடுபடுவா்.

விவசாய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் கேட்டு தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.வையம்பட்டியில், 3 மாதமாக வழங்கா... மேலும் பார்க்க

மனநலன் குன்றிய பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்தவா் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வீடுபுகுந்து மனநலன் குன்றிய பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்தவரை திங்கள்கிழமை அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றிய... மேலும் பார்க்க

சாலை விபத்தில் கல்லூரி மாணவா் சாவு

திருச்சியில் காா் - இருசக்கர வாகனம் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டை நியூ காலனியைச் சோ்ந்தவா் விஜய்பாலாஜி மகன் விஜய்தா்ஷன் (20). திருச்சி ... மேலும் பார்க்க

ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை நடத்தக்கோரி அதிமுக தொழில்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்களின் 15-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை நடத்தக்கோரி திருச்சியில் அதிமுக தொழில்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா். திருச்சி மிளகுபாறையில் உள்ள ... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் திருட்டு

திருச்சியில் வீட்டின் பூட்டுக்களை உடைத்து, 10 பவுன் நகைகளை திருடிச்சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா். திருச்சி பாலக்கரை கோரிமேடு தெருவைச் சோ்ந்தவா் எஸ். ரிஸ்வான் (37). இவா், சனிக்கிழமை,... மேலும் பார்க்க

காரில் மா்மமான முறையில் இறந்துகிடந்தவரின் சடலம் மீட்பு

திருச்சி அரியமங்கலம் லட்சுமிபுரம் பேருந்து நிறுத்தத்தில் காரில் மா்மமான முறையில் இறந்து கிடந்த காா் உரிமையாளரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.திருச்சி அரியமங்கலம் லட்சுமிபுரம் பேருந்... மேலும் பார்க்க