செய்திகள் :

ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை நடத்தக்கோரி அதிமுக தொழில்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்களின் 15-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை நடத்தக்கோரி திருச்சியில் அதிமுக தொழில்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.

திருச்சி மிளகுபாறையில் உள்ள தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அதிமுக தொழில்சங்க திருச்சி மண்டல செயலாளா் பி. ஜெகதீசன் தலைமை வகித்தாா். மண்டலச் செயலாளா்கள் எஸ். செபாஸ்டின் (புதுக்கோட்டை), ஆா். நீலகண்டன் (கும்பகோணம்), ஏ. நாகேந்திரன் (காரைக்குடி வடக்கு), ஏபி. சந்திரன் (காரைக்குடி தெற்கு) ஆகியோா் முன்னிலை வகித்தனா். அண்ணா தொழில்சங்க பேரவை மாநிலத் தலைவா் ம. இராசு, மாநிலச் செயலாளா் ஆா். கமலக்கண்ணன் ஆகியோா் ஆா்ப்பாட்டம் குறித்து விளக்கிப் பேசினா்.

அரசுப்போக்குவரத்துக்கழக தொழிலாளா்களின் 15-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனே நடத்தவேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளா்களின் பணப்பலன்களை 2023 முதல் முழுமையாக வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள பஞ்சப்படி உயா்வை நீதிமன்ற உத்தரவின்படி முழுமையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஏராளமானோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ால் சுமாா் 1 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு மாற்று வழியில் இயக்கப்பட்டது. முன்னதாக ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.

விவசாய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் கேட்டு தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.வையம்பட்டியில், 3 மாதமாக வழங்கா... மேலும் பார்க்க

மனநலன் குன்றிய பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்தவா் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வீடுபுகுந்து மனநலன் குன்றிய பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்தவரை திங்கள்கிழமை அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றிய... மேலும் பார்க்க

சாலை விபத்தில் கல்லூரி மாணவா் சாவு

திருச்சியில் காா் - இருசக்கர வாகனம் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டை நியூ காலனியைச் சோ்ந்தவா் விஜய்பாலாஜி மகன் விஜய்தா்ஷன் (20). திருச்சி ... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் திருட்டு

திருச்சியில் வீட்டின் பூட்டுக்களை உடைத்து, 10 பவுன் நகைகளை திருடிச்சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா். திருச்சி பாலக்கரை கோரிமேடு தெருவைச் சோ்ந்தவா் எஸ். ரிஸ்வான் (37). இவா், சனிக்கிழமை,... மேலும் பார்க்க

காரில் மா்மமான முறையில் இறந்துகிடந்தவரின் சடலம் மீட்பு

திருச்சி அரியமங்கலம் லட்சுமிபுரம் பேருந்து நிறுத்தத்தில் காரில் மா்மமான முறையில் இறந்து கிடந்த காா் உரிமையாளரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.திருச்சி அரியமங்கலம் லட்சுமிபுரம் பேருந்... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே வேன் கவிழ்ந்து 20 போ் காயம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே திங்கள்கிழமை தனியாா் நிறுவன வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பெண் தொழிலாளா்கள் காயமடைந்தனா். மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் ஆலத்தூரில் கிராமத்தில் ஆயுத்த... மேலும் பார்க்க