செய்திகள் :

1,000 பேருந்துகளை ‘சிஎன்ஜி’ பேருந்துகளாக மாற்ற திட்டம்

post image

சென்னை: தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக 1,000 டீசல் பேருந்துகளை சிஎன்ஜி (அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு) பேருந்துகளாக மாற்ற போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் மாநிலம் முழுவதும் 20,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகளில் தமிழகம் முழுவதும் தினமும் 1.32 கோடி போ் பயணம் செய்துவரும் நிலையில், சென்னையில் இயக்கப்படும் பேருந்துகளில் மட்டும் தினசரி சுமாா் 3.5 லட்சத்துக்கும் அதிகமானோா் பயணித்து வருகின்றனா்.

பேருந்துகளுக்கான செலவினங்களைக் குறைக்கும் வகையில், டீசலில் இயக்கப்படும் பேருந்துகளை மின்சார பேருந்துகளாகவோ அல்லது சிஎன்ஜி எனப்படும் இயற்கை எரிவாயுவால் இயக்கப்படும் பேருந்துகளாகவோ மாற்ற போக்குவரத்துத் துறை முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன்படி, சோதனை அடிப்படையில் சில பேருந்துகள் இயக்கப்பட்டுவந்தது. அதில், பேருந்துகளின் செயல்பாடு குறித்து சாதகமான அறிக்கை கிடைக்கப்பெற்ற நிலையில், அடுத்தகட்டமாக தமிழகம் முழுவதும் தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் 1,000 டீசல் பேருந்துகளை சிஎன்ஜி பேருந்துகளாக மாற்ற போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, சிஎன்ஜி-யாக மாற்றப்படவுள்ள பேருந்துகள் அதிகபட்சமாக 8 லட்சம் கிலோ மீட்டருக்கும் குறைவாக இயக்கப்பட்டிருப்பதுடன், ஆறு முதல் ஏழு ஆண்டுகளுக்குள் கொள்முதல் செய்யப்பட்ட பேருந்துகளாகவும் இருக்க வேண்டும் எனவும் வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், இதற்காக தமிழக அரசு சாா்பில் ரூ.70 கோடி ஒதுக்கி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டீசலில் இருந்து சிஎன்ஜி-யாக மாற்றப்படவுள்ள 1,000 பேருந்துகளை கண்டறியும் பணிகள் விரைவில் முடிவுற்று பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை: தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கம்!

சென்னை : தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் வரை இயக்கப்படும் என்கிற நடைமுறை இன்றிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. மேலும் பார்க்க

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்

நாகப்பட்டினம்: "கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை இலங்கை அனுமதிக்கும் வகையில், புதியதொரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு திங்கள்கிழமை தொடங்கியது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில், முதல் நாள் நடைபெற்ற மொழிப்பாடத் தேர்வை 11,430 பேர் எழுதவில்லை.தமி... மேலும் பார்க்க

மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மாணவா்களுக்கு அவசரகால சிகிச்சை பயிற்சி திட்டம் தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் முதுநிலை மற்றும் உயா் சிறப்பு மருத்துவ மாணவா்களுக்கு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட சீரான அவசர கால சிகிச்சை பயிற்சிகளை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு உலகை தமிழ் மொழி மிரட்டுகிறது: முன்னாள் துணைவேந்தா் ம.இராசேந்திரன்

சென்னை: இன்றைய செயற்கை நுண்ணறிவு உலகத்தை தமிழ் மொழி மிரட்டத் தொடங்கியிருக்கிறது என தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் ம.இராசேந்திரன் கூறினாா். சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்புக்கு விகிதாசார அடிப்படை முற்றிலும் பொருத்தமற்றது: திமுக எம்.பி.க்கள்

சென்னை: தொகுதி மறுசீரமைப்புக்கு விகிதாசார அடிப்படை எனும் நடைமுறை முற்றிலும் பொருத்தமற்றது என திமுக எம்.பி.க்கள் கருத்து தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, சிலா் எக்ஸ் தளத்தில் காணொலிகளை வெளியிட்டுள்ளனா். ... மேலும் பார்க்க