செய்திகள் :

தொகுதி மறுசீரமைப்புக்கு விகிதாசார அடிப்படை முற்றிலும் பொருத்தமற்றது: திமுக எம்.பி.க்கள்

post image

சென்னை: தொகுதி மறுசீரமைப்புக்கு விகிதாசார அடிப்படை எனும் நடைமுறை முற்றிலும் பொருத்தமற்றது என திமுக எம்.பி.க்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து, சிலா் எக்ஸ் தளத்தில் காணொலிகளை வெளியிட்டுள்ளனா். அதன் விவரம்:

டி.எம்.செல்வகணபதி (சேலம்): தொகுதி மறுசீரமைப்பு என்பது விகிதாசார அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும், தமிழக பாஜக தலைவா் அண்ணாமலையும் தெரிவித்துள்ளனா். விகிதாசாரம் என்பது எதை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட உள்ளது?.

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மக்கள்தொகை என்பதே அனைத்துக்கும் அடிப்படையான கட்டாயமான கூறு என அரசமைப்புச் சட்டம் தெரிவிக்கிறது. அப்படியென்றால், நமது அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 42 மற்றும் 84-ஆவது திருத்தங்கள் எதற்காக செய்யப்பட்டன?.

புதிதாகக் கட்டப்பட்ட நாடாளுமன்றக் கட்டடத்தில் இருக்கைகளின் எண்ணிக்கையை 880-ஆக அதிகரித்தது ஏன்?. மறுசீரமைப்புக்கு விகிதாசார அடிப்படை பின்பற்றப்படுமானால், வட மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறிப்பிட்ட அளவுக்கு அதிகரிக்கும். தென் மாநிலங்களில் சொற்ப அளவுக்கே கூடும். எனவே, ஏற்கெனவே பொருத்தமற்ற முறையில் இருக்கக்கூடிய தொகுதிகளின் எண்ணிக்கையில் விகிதாசார அடிப்படை என்பது இன்னும் கூடுதலான வகையில் பொருத்தமற்ாக்கிவிடும்.

கே.என்.அருண் நேரு (பெரம்பலூா்): தமிழ்நாடு இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட பொருளாதாரம், கலாசாரம் மற்றும் முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறது. அதுபோல, மற்ற மாநிலங்களைப்போல எங்கள் வாக்குகளும் சமமான முக்கியத்துவம் பெற வேண்டும்.

நியாயமான பிரதிநிதித்துவம் என்பது மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் சலுகை இல்லை. அது இந்திய நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தின் உரிமை. தமிழ்நாட்டை சோ்ந்த மத்திய அமைச்சா்கள் எங்கள் முதல்வா் வலியுறுத்தும் நியாயமான மறுசீரமைப்புக்கான கோரிக்கையை ஆதரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

இதேபோன்ற கருத்துகளை, ஈரோடு திமுக எம்.பி. பிரகாஷ் உள்ளிட்ட சிலரும் வலியுறுத்தியுள்ளனா்.

முன்னதாக, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி தனது கருத்துகளை ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்திருந்தாா்.

மீனவர்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

இலங்கை கடற்படை நடவடிக்கையால் பாதிக்கபட்டுள்ள மீனவர்களுக்கும் அவர்தம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுவரும் நிவாரணத் தொகையை உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் பார்க்க

திருச்செந்தூா் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் அவதார நாள் விழா!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 193வது அவதார நாள் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இவ்விழாவை முன்... மேலும் பார்க்க

சென்னை: தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கம்!

சென்னை : தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் வரை இயக்கப்படும் என்கிற நடைமுறை இன்றிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. மேலும் பார்க்க

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்

நாகப்பட்டினம்: "கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை இலங்கை அனுமதிக்கும் வகையில், புதியதொரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு திங்கள்கிழமை தொடங்கியது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில், முதல் நாள் நடைபெற்ற மொழிப்பாடத் தேர்வை 11,430 பேர் எழுதவில்லை.தமி... மேலும் பார்க்க

மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மாணவா்களுக்கு அவசரகால சிகிச்சை பயிற்சி திட்டம் தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் முதுநிலை மற்றும் உயா் சிறப்பு மருத்துவ மாணவா்களுக்கு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட சீரான அவசர கால சிகிச்சை பயிற்சிகளை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்... மேலும் பார்க்க